Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 மாசம் ஆகியும் வரல.. தமிழ்நாட்டை வஞ்சிப்பதே பாஜக அரசின் 24 மணி நேர வேலை.. சு.வெங்கடேசன் சுளீர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விமான நிலையம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் என விமானத்துறை அறிவித்தது. ஆனால் இன்று வரை இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் அதன் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி, இணைத்தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்க வேண்டும். அதேபோல பைலேட்டர் ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையத்தை இணைக்க வேண்டும். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Madurai MP Su Venkatesan says BJP government is doing 24-hour work to deceive Tamil Nadu

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மதுரை விமான நிலையம் 24*7 விமான நிலையமாக செயல்படும் என்று விமானத்துறை அறிவித்த அறிவிப்பு இப்போது வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. மதுரை விமான நிலைய வளர்ச்சியில் மத்திய அரசின் அக்கறையின்மை தொடர்ச்சியாக நீடிக்கிறது. பல அழுத்தங்களுக்கு பிறகுதான் 24×7 என்பதை ஏற்றுக்கொண்டு அறிவித்தார்கள். ஆனால் இன்றைக்கு வரை அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு

இது குறித்து இன்றைய கூட்டத்தில் கவலையோடு விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தென் மாவட்டங்களில் இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்து, அதேபோல மதுரை விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர்களையும் இணைத்து மத்திய அமைச்சரை சந்தித்து இது குறித்து வலியுறுத்துவது என்ற முடிவினை எடுத்துள்ளோம்.

மதுரை மற்றும் தென் மாவட்ட தொழில் வணிக வளர்ச்சிக்கு மதுரை விமான நிலையத்தினுடைய விரிவாக்கம், சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது மிக முக்கியமான நடவடிக்கை. இதற்கு சொத்தை காரணங்களை மீண்டும் மீண்டும் மத்திய அரசு சொல்வது ஏற்க முடியாத ஒன்று. மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துகிற உள்நாட்டு பயணிகளுடைய எண்ணிக்கையும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் மிக அதிகம். டொமெஸ்ட்டிக் விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமே நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது.

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருக்கிறது. அதனை விட பலமடங்கு மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்கிற பயணிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால், மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையாக்கப்படவில்லை. இது முழுக்க ஒரு அரசியல் காரணத்துக்காக செய்யப்படுகிற ஒரு வஞ்சகம். அதனால்தான் தொடர்ந்து இவ்வளோ பெரிய ஒரு போராட்டத்தை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+