Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைக்குழந்தையுடன் கலங்கி நின்ற பெண்.. ஆன்ஸ்பாட்டில் டோஸ்.. அடம்பிடித்து சாதித்த வெங்கடேசன் எம்பி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கலங்கிய கண்களுடன் கைகுழந்தையுடன் நின்ற பெண்ணிற்கு தனது உதவியால் கண்ணீரை துடைத்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி வெங்கடேசன். மதுரையில் நீண்ட நாட்களாக விதவை சான்றிதழ் கேட்டு அலைந்த பெண்ணுக்கு அந்த சான்றிதழை அதிகாரிகளிடம் பேசி கிடைக்க செய்தார்.

விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்து இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று வெங்கடேசன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.

Madurai MP Venkatesan helped woman who asked for widow certificate

விதவை சான்றிதழ், முதியோர் உதவி தொகை பெற சான்றிதழ் பெறுவதற்கு, பெண்களும், முதியவர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்துவிட்டு அலைவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இப்போது மட்டுமல்ல.. பல வருடங்களாக , யார் ஆட்சியில் இருந்தாலும் இது நடந்து வருகிறது.

இதற்கு காரணம் முறையான சான்றிதழ் இணைக்கப்படாதது ஒரு காரணம் என்று அதிகாரிகள் கூறினாலும், இன்னொரு காரணமாக அவர்கள் அதற்கு தகுதியானவர்களா என்று ஆய்வு செய்ய ஆகும் கால அளவும் காரணமாக இருக்கிறது. இதனிடையே லஞ்சமும் முக்கிய காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்நிலையில் ஒரு பெண் ஆறுமாதமாக விதவை சான்றிதழ் வாங்க முடியாமல் கை குழந்தையுடன் அலைந்து கொண்டிருந்திக்கிறார். அவருக்கு மதுரை எம்பி வெங்கடேசன் உதவி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன். மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஒரு வயது கைக்குழந்தையோடு வந்த பெண் கலங்கிய கண்களோடு சொன்னார். "விதவை சான்றிதழுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகிவிட்டது. அலையாய் அலைகிறேன். கிடைக்கவில்லை" என்று அதிகாரிகள் ஏதேதோ காரணம் சொன்னார்கள்.

அந்த பெண்ணுக்கு சான்றிதழ் கொடுக்காமல் முகாமை முடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். இரவு 7 மணிக்கு சான்றிதழை கொடுத்து முகாமை முடித்தோம். விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்து இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அதிகாரிகள் கடவுள் மனப்பான்மையில் செயல்படுகிறார்கள்.......ஒவ்வொர்துறைக்கும் கால நிர்ணயம் தேவை..... என்று வலியுறுத்தி உள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்.... ஆதரவற்றோர் விதவைச்சான்று. பட்டா மற்றும் வரன்முறைபட்டா.. ஆண்டுகள் கடந்தும் கிடைக்கவில்லை என்று ஒரு நெட்டிசன் குற்றம்சாட்டினார்.

கம்யூனிஸ்ட்கள் எப்போதும் எளிய மக்களின் வலி அறிந்தவர்கள் தான் வாழ்த்துக்கள் தோழர் என்று ஒரு நெட்டிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அரசு இயந்திரங்கள் சுயநலத்துடன் செயல்படுவது வருத்தமே என்று இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+