5 ஆண்டுகளாக தாமதம்.. மதுரை காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய வணிக வளாகம் எப்போது திறப்பு?
மதுரை: மதுரை காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வளாகம் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின் திறந்து வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. 2021ஆம் ஆண்டிலேயே கட்டடப் பணிகள் முடிவடைந்தாலும், சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக திறந்து வைக்கப்படவில்லை. இதனால் மதுரை மக்களிடையே காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை ரயில் நிலையம் அருகே பெரியார் பேருந்து நிலையம் மற்றும் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் ஆகிய இரு பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வந்தன. உள்ளூர் மாநகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், மதுரையின் முக்கிய பேருந்து நிலையமாக உருவெடுத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த இரு பேருந்து நிலையமும் இடிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் ரூ.174 கோடியில் பேருந்து நிலையத்துடன் 475 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் கட்டப்பட்டுள்ளன. வெறும் வணிக வளாகமாக மட்டுமல்லாமல், பொழுதுபோக்கு தளமாகவும் கட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மீனாட்சியம்மன் கோயில் அருகில் இருப்பதால், வாகனங்களை நிறுத்துவதற்காக அண்டர் கிரவுண்ட் வாகன பார்க்கிங் உள்ளன.
ஆண்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம்
இந்த கடைகள் ஏலம் விட்டு பொதுமக்கள் வரத் தொடங்கினால், மாநகராட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் திறக்கப்படவில்லை. இந்த காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தில் இன்னும் மின்சாரம் மற்றும் எக்ஸ்கலேட்டர் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
கட்டட அனுமதியில் சிக்கல்
சுமார் 5 ஆண்டுகளாக கட்டுமான பணிகளே முடிவடையாததால், மதுரை மக்களிடையே விவாத பொருளாக மாறி இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரிக்கையில், மீனாட்சியம்மன் கோயில் உயரத்திற்கு மேல் எந்த கட்டடமும் கட்டக் கூடாது. இந்த விதிமுறை காரணமாக வணிக வளாகத்திற்கு கட்டிட வரைப்பட அனுமதி பெறுவதில் சிக்கல் இருந்தது.
மின்சாரம் பெறுவதில் சிக்கல்
அதனை சரி செய்தாலும், மின் இணைப்பு இதுவரை பெறவில்லை. இதுவொரு பக்கம் இருக்க, தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாமல் இருக்கிறது. தற்போது வரை 99 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் முடித்து, உரிய அனுமதி கிடைத்த பின் காம்ப்ளக்ஸ் திறக்கப்படும் என்று கூறி உள்ளனர்.
99% பணிகள் நிறைவு
கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கி 18 மாதங்களிலேயே முடிவடைந்துவிட்டது. ஆனால் இதுநாள் வரை காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய கட்டடம் வெறும் காட்சிப் பொருளாகவே மாறியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்பாக திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அப்போதும் திறக்கப்படவில்லை. இதனால் கடையை கொடுத்தவர்கள் தொடர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது












Click it and Unblock the Notifications