மதுரை லாக்டவுன்: அத்துமீறி வாகனங்களில் வலம் வந்தால் பறிமுதல்- 10 சிறப்பு பறக்கும் படை தீவிரம்
மதுரை: கொரோனா பரவுவதைத் தடுக்க மதுரையில் 7 நாட்கள் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. லாக்டவுன் காலத்தில் வாகனங்களில் வலம் வந்தால் அவற்றை பறிமுதல் செய்ய 10 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
கொரானா பரவுதலை தடுக்கும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரையிலும் இன்று முதல் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.

நடமாட்டமே இல்லை
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை, கீழமாசிவீதி, விளக்குத்தூண், கோரிப்பாளையம், காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கியச் சந்திப்புகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பிரதான பேருந்து நிலையங்களான ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் மூடப்பட்டுவிட்டன.

சிறப்பு படைகள்
மேலும் பொதுமக்கள் வெளியே வருவதை கண்காணிக்கும் வகையில் சிறப்புப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே முக்கிய இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகரின் முக்கிய பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

வாகனங்கள் பறிமுதல் எச்சரிக்கை
வாகனங்களில் தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே வந்தால் அவர்களை கண்காணித்து எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். லாக்டவுனை மீறி வாகனங்களில் வெளியே வந்தால் அவரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

பொதுமக்களுக்கு அட்வைஸ்
மேலும் மதுரை மாநகரில் உள்ள 20 காவல் நிலைய சரகங்களில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள், அனைத்தையும் தங்களது காவல் நிலைய சரகத்தின் எல்கைக்குள் உள்ள கடைகளில் மட்டும் பொருட்களை வாங்கிக் கொள்ளவும். மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், கொள்ளைநோய் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications