வேலையை காட்டிய ராட்வைலர் நாய்.. ஓனரம்மாவையே பாய்ந்து குதறியெடுத்து.. மதுரை திருமங்கலத்தில் பரபரப்பு
மதுரை: ஆசை ஆசையாக வளர்த்த நாயே, உரிமையாளரை பாய்ந்து கடித்துள்ளது.. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.. மதுரை திருமங்கலத்தில் இந்த பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது.
ராட்வீலர் நாய் என்பது செர்மனியைச் சேர்ந்த ஒரு வீட்டு நாய் இனமாகும்.. இது நடுத்தர அளவிலிருந்து பெரிய உருவம் கொண்டது... இதன் மேல் தாடையில் 22, கீழ்தாடையில் 20 என, கத்திரிக்கோல் வடிவில் பல்வரிசை அமைந்திருக்கும்.

நாய்கள்: மற்ற நாய்கள் ஆவேசமாகி கடிக்கும் வேகத்தைவிட, இநத ராட் வைலர் நாய் கடிக்கும் வேகமும் தீவிரமும் அதிகமாகும்.. அதாவது, ராட் வைலர் நாய் கடித்தால், மனிதர்களின் கை எலும்புகளே நொறுங்கி விடுமாம்.. வீட்டில் இதை யார் வளர்க்கிறார்களோ, அவர்கள் மட்டும்தான் உணவு தர முடியும்.,. தினமும் உணவு தரும் ஒரு உரிமையாளருக்கே இந்த நாய் கட்டுப்படும்... ராட் வைலர் நாய் இனங்கள் மிக மிக மூர்க்கமானவை என்றே கருதப்படுகின்றன.
அன்று ராட்வீலர் நாய்கள், மாடு மேய்க்கும் நாய்களாக பயன்படுத்தப்பட்ட நிலையில், இப்போது மனிதர்களுக்கு பலவகைகளில் உதவுகிறது.. குறிப்பாக, தேடுதல் காப்பாற்றுதல், விழியிழந்தோருக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளில் மனிதர்களுக்கு உதவுகின்றன.
சென்னை சிறுமி: ஆனால், சில மாதங்களுக்கு முன்பு சென்னையில், 5 வயது சிறுமியை கடித்து குதறிய இந்த இன நாய், ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. இதற்குபிறகுதான், வீட்டில் நாய் வளர்க்க வேண்டுமானால், கண்டிப்பாக லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது.
அலறல் சத்தம்: அதாவது, நாய்க்கு அருகே கிடந்த துணியை ஜான்சி எடுக்க முயற்சி செய்தாராம். அப்போதுதான் நாய் பாய்ந்து கடித்து குதறியிருக்கிறது இதனால், வலி தாங்க முடியாமல் ஜான்சி அலறி துடித்தார்.. அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நாயை விரட்டி , ஜான்சிராணியை மீட்டனர். பிறகு உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரையை பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாய்கள் கடித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சுமார் ஒன்றே கால் லட்சம் பேர் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.. மதுரை பகுதிகளில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள். N.G. மோகன் என்ற நபர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட நாய் கடி விவரங்களை RTI மூலமாக கேட்டு பெற்றபோது, இந்த தகவல் வெளியாகியிருந்தது.
அதிர்ச்சி: எனவே, மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்து வரும்நிலையில், இன்று வீட்டில் ஆசையாக வளர்த்து வரும் நாயே இப்படி கடித்து குதறி வைத்துள்ளது, மதுரைவாசிகளை கதிகலங்க செய்து வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications