வேலையை காட்டிய ராட்வைலர் நாய்.. ஓனரம்மாவையே பாய்ந்து குதறியெடுத்து.. மதுரை திருமங்கலத்தில் பரபரப்பு
மதுரை: ஆசை ஆசையாக வளர்த்த நாயே, உரிமையாளரை பாய்ந்து கடித்துள்ளது.. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.. மதுரை திருமங்கலத்தில் இந்த பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது.
ராட்வீலர் நாய் என்பது செர்மனியைச் சேர்ந்த ஒரு வீட்டு நாய் இனமாகும்.. இது நடுத்தர அளவிலிருந்து பெரிய உருவம் கொண்டது... இதன் மேல் தாடையில் 22, கீழ்தாடையில் 20 என, கத்திரிக்கோல் வடிவில் பல்வரிசை அமைந்திருக்கும்.

நாய்கள்: மற்ற நாய்கள் ஆவேசமாகி கடிக்கும் வேகத்தைவிட, இநத ராட் வைலர் நாய் கடிக்கும் வேகமும் தீவிரமும் அதிகமாகும்.. அதாவது, ராட் வைலர் நாய் கடித்தால், மனிதர்களின் கை எலும்புகளே நொறுங்கி விடுமாம்.. வீட்டில் இதை யார் வளர்க்கிறார்களோ, அவர்கள் மட்டும்தான் உணவு தர முடியும்.,. தினமும் உணவு தரும் ஒரு உரிமையாளருக்கே இந்த நாய் கட்டுப்படும்... ராட் வைலர் நாய் இனங்கள் மிக மிக மூர்க்கமானவை என்றே கருதப்படுகின்றன.
அன்று ராட்வீலர் நாய்கள், மாடு மேய்க்கும் நாய்களாக பயன்படுத்தப்பட்ட நிலையில், இப்போது மனிதர்களுக்கு பலவகைகளில் உதவுகிறது.. குறிப்பாக, தேடுதல் காப்பாற்றுதல், விழியிழந்தோருக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளில் மனிதர்களுக்கு உதவுகின்றன.
சென்னை சிறுமி: ஆனால், சில மாதங்களுக்கு முன்பு சென்னையில், 5 வயது சிறுமியை கடித்து குதறிய இந்த இன நாய், ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. இதற்குபிறகுதான், வீட்டில் நாய் வளர்க்க வேண்டுமானால், கண்டிப்பாக லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது.
அலறல் சத்தம்: அதாவது, நாய்க்கு அருகே கிடந்த துணியை ஜான்சி எடுக்க முயற்சி செய்தாராம். அப்போதுதான் நாய் பாய்ந்து கடித்து குதறியிருக்கிறது இதனால், வலி தாங்க முடியாமல் ஜான்சி அலறி துடித்தார்.. அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நாயை விரட்டி , ஜான்சிராணியை மீட்டனர். பிறகு உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரையை பொறுத்தவரை, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாய்கள் கடித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சுமார் ஒன்றே கால் லட்சம் பேர் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.. மதுரை பகுதிகளில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள். N.G. மோகன் என்ற நபர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட நாய் கடி விவரங்களை RTI மூலமாக கேட்டு பெற்றபோது, இந்த தகவல் வெளியாகியிருந்தது.
அதிர்ச்சி: எனவே, மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்து வரும்நிலையில், இன்று வீட்டில் ஆசையாக வளர்த்து வரும் நாயே இப்படி கடித்து குதறி வைத்துள்ளது, மதுரைவாசிகளை கதிகலங்க செய்து வருகிறது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications