காக்கி சட்டையை கழட்டி வச்சுட்டு வாண்ணே.. சண்டை போடுவோம்.. போலீஸுக்கு சவால் விடும் ரவுடி ஆடியோ
மதுரை: காக்கி சட்டையை கழட்டி வச்சுட்டு வாண்ணே , சண்டை போடுவோம் என போலீஸ்காரரை சண்டைக்கு இழுக்கும் ரவுடியின் ஆடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர காவல் துறை சார்பாக காவல் நிலையம் வாரியாக தனிப்படையினர் மற்றும் துணை ஆணையர், ஆணையர் தலைமையில் தனிப்படையினர் என பல்வேறு குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து ரவுடிகளின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தனிப்பிரிவு
இந்த நிலையில் மதுரை மாநகர் தனிப் பிரிவில் பணியாற்றும் செந்தில் என்ற காவலரை தொலைபேசி மூலம் அழைத்து பந்தல்குடி பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜேஷ் என்பவர் அதிகாரியை மிரட்டுவது போன்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரவுடி ராஜேஷ்
இது தொடர்பாக தலைமறைவாக உள்ள ரவுடி ராஜேஷை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். காவலரை அலைபேசியில் தொடர்பு கொண்ட பந்தல்குடி ரவுடி ராஜேஷ் கூறியதாவது: "என் கை, கால்களை உடைக்க வேண்டும் என சொன்னயாமே, நீ எங்கே இருக்கேனு சொல்லு.

காக்கி சட்டையை கழட்டி வை
நான் வாரேன், நீ காக்கி சட்டையை கழட்டி வச்சுட்டு ஆம்பளையா வாண்ணே, சண்டை போடுவோம், நான் வீரன். இன்னும் மூன்று நாளில் பீபிகுளத்தில ஒருவனை கொன்னுடுவேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

மிரட்டல், தாக்குதல்
பேசியவரை ஏட்டு கண்டிக்க, சரிண்ணே, மன்னிச்சுடு, என்னை சுட்டுக் கொல்லுங்க. உயிரையே வெறுத்துவிட்டேன் என விரக்தி அடைந்து பேசிய ஆடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் ரவுடிகளின் அட்டகாசங்கள் அளவுக்கு மீறியே செல்கிறது. போலீஸாரை மிரட்டுவதும், தாக்குவதும், சவால் விடுவதும் தொடர்கதையா கி வருகிறது.

தேடும் பணிகள் தீவிரம்
போலீஸுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழலே நிலவி வருகிறது. எனவே ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். சவால் விட்ட மதுரை ரவுடி ராஜேஷை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும் அவர் ஒரு கொலையை செய்வதற்குள் அவரை பிடிக்க தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications