Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரில் ஏறி ரகளை செய்தால் கைது.. வாகனங்கள் வீடியோவில் கண்காணிக்கப்படும்- மதுரை எஸ்பி அதிரடி வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

மதுரை : தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி காளையார்கோயில், பசும்பொன் கிராமத்துக்கு செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மதுரை மாவட்டத்திற்குள் விதியை மீறினால் பறிமுதல் செய்யப்படும் என மதுரை எஸ்பி சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் தேவர் குருபூஜை, மருதுபாண்டியர்கள் நினைவு நாள், இமானுவேல் சேகரன் நினைவு நாள் போன்ற நிகழ்வுகளின்போது கார்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் செல்வது வழக்கம்.

அப்போது, கார்களின் மேல் முன்புறம் பானட்டில் அமர்ந்துகொண்டும், கதவுகளில் தொங்கியபடியும் இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுவது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில், தேவர் குருபூஜை, மருது சகோதரர்கள் நினைவிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்படும் என்றும் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை எஸ்பி சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.

31 பேர் மீது நடவடிக்கை

31 பேர் மீது நடவடிக்கை

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், "செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் நடந்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டத்திற்குள் காவல்துறை, அரசின் விதியை மீறியது தொடர்பாக மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 31 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விதி மீறினால் பறிமுதல்

விதி மீறினால் பறிமுதல்

நாளை (அக்டோபர் 27) மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலுக்கும், தேவர் ஜெயந்தி - குருபூஜையையொட்டி வரும் அக்டோபர் 29, 30ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கும் சொந்த கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மதுரை மாவட்டத்திற்குள் காவல்துறை, அரசின் விதியை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வோம்.

கைது - பறிமுதல்

கைது - பறிமுதல்

சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்வது குறித்து சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். மேலும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும். செல்லும் வழியில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும். சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் பரிசோதிக்கப்படும். விதிகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் உடனே விடுவிக்கப்படமாட்டாது. நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.

கார்களில் ஏறி நின்றால் கைது

கார்களில் ஏறி நின்றால் கைது

இதன்மூலம் பண விரயம், நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டிய சூழல் உருவாகும். வீதிமீறலை கண்டறிய மதுரை மாவட்ட எல்லைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கப்படும். காவல்துறையினர் மூலம் வீடியோ எடுக்கப்படும். அரசு, காவல்துறையினர் வாகனங்களில் ஏறி நின்று ரகளை செய்வோர் கைது செய்யப்படுவர். இது போன்ற நிகழ்வை சமூக வலைத்தளங்களில் பரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேட்ரோல்

பேட்ரோல்

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தலா 2 கண்காணிப்பு வாகனங்கள் வழங்கப்பட்டு, அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் கண்காணிக்கப்படும். மாவட்டம் முழுவதும் பட்டாலியன், உள்ளூர் போலீஸார் உட்பட சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துகிறோம். அனுமதி பெற்ற வாகனங்கள் எவ்வித வீதிமீறலும் இன்றி முறையாக சென்றுவர அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு காவல்துறையினருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+