மதுரையில் வரலாறு மாறுகிறது.. வருகிறது டைடல் பார்க்.. வேகமெடுத்த பணிகள்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்
மதுரை: மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.. கிட்டத்தட்ட 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க போகிறதாம்.. மதுரை டைடல் பார்க் கட்டிடம் எப்போது திறக்கப்படுகிறது என்பது குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா, முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது.
மதுரையில் டைடல் பார்க் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என்று அன்றைய நிதியமைச்சர் பட்ஜெட் கூட்டத்தின்போது கூறியிருந்தார்.. இந்த அறிவிப்பையடுத்து, மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடி அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக டைடல் பார்க் அமைய உள்ளது..

மதுரை டைடல் பார்க்: இதில் முதற்கட்டமாக 600 கோடி 5 ஏக்கரிலும், பிறகு 2ம் கட்டமாக மேலும் 5 ஏக்கரிலும் டைடல் பார்க் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.. மொத்தம் 10 ஏக்கரில் மதுரை டைடல் பார்க் திட்டம் அமையவுள்ளது. இதையடுத்து, மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் துவங்கப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 5.63 ஏக்கர் நிலத்தை ஒப்படைப்பதற்கான பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது... மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு அருகே கீழ்தளத்தளத்துடன் 12 தளங்களுடன் இந்த கட்டிடம் அமைகிறது. இதற்கான உட்கட்டமைப்பு பணிகள், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், பிளம்பிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து இ-டெண்டர் விடப்பட்டது.
தென்மாவட்டம்: கலாச்சாரம், பண்பாட்டு தலைநகரான மதுரை, தொழில் துறையில் பின்தங்கியிருப்பதால் இந்த டைடல் பார்க் திட்டம் ஒரு கனவு திட்டமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.. இந்த டைடல் பார்க் நிறுவப்பட்டுவிட்டால், தென் மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, டைடல் பார்க் திட்டத்தை தொடர்ந்து இதனை சார்ந்த மற்ற தொழில் வாய்ப்புகளும் வர வாய்ப்புள்ளதால் மதுரை தொழில் துறையிலும் பிற நகரங்களைபோலவே மிகப்பெரிய வளர்ச்சியை பெறக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், டைடல் பார்க் அமைக்கும் பணிகள் துரிதமாகியிருக்கின்றன.. இந்த டைடல் பார்க் அமைய உளள இடத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரிலும் ஆய்வு செய்திருக்கிறார்.
நில எடுப்பு: இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜா, "12 தளங்கள், 60 மீட்டர் உயரத்தில் டைடல் பார்க் அமைய உள்ளது.. இதற்கான நிலஎடு்ப்பு எடுப்பு, டெண்டர் பணிகள் நிறைவடைந்து விட்டது.. விரைவில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும், வரும் 2026 ஜனவரியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது
தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் சமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதனால் மேலும் பல திட்டங்களுடன் மதுரையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும்.இந்த டைடல் பார்க் கட்டிடம், தென் தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்கும். டெண்டருக்கான இறுதிப்பணிகள் நடக்கும் நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும். இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திறப்பு: மதுரையில் சிப்காட் தொழிற் பூங்காவும் விரைவில் அமைய உள்ளது. அதற்கான நில எடுப்பு பணிகள் கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. தற்போது 250 ஏக்கர் நிலம் எடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. மேலும் நிலம் தேவைப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications