அண்ணாந்து பார்க்க வைக்கப்போகும் மதுரை.. தூங்காநகரில் அமையும் பிரம்மாண்டம்.. இளைஞர்களுக்கு ஜாக்பாட்!
மதுரை: தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமும் தமிழ்நாடு மின்னணு கழகமும் இணைந்து தமிழ்நாடு டைடல் பார்க் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றன. ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் டைடல் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது. அந்த வகையில் சென்னை, கோவை நகரங்களுக்கு அடுத்தபடியாக மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் டைடல் பார்க் கட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதன் தொடக்க பணிகள் நிதானமாக நடைபெற்று வந்தது. சேலம் உருக்காலை, நெய்வேலி என்எல்சி போன்ற எந்த பெரும் தொழிற்சாலைகளும் இல்லாத மதுரைக்கு, டைடல் பார்க் அறிவிப்பு இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மதுரையை பொறுத்தவரை மாட்டுத்தாவணி அருகே 9.97 ஏக்கர் நிலத்தில் டைடல் பார்க் அமையவுள்ளது. ரூ.500 கோடியில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் இரு கட்டங்களாக அமையவுள்ளது. இதன் மூலமாக சுமார் 5,500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் எப்போது கட்டுமான பணிகள் தொடங்கும் என்பதே இளைஞர்களின் கேள்வியாக இருந்தது.
ஏனென்றால் தென் மாவட்டங்களில் இருந்து ஐடி பணிகளுக்கான சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இந்த நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி, டெண்டர் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக டைடல் பார்க்-க்கு அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து மாட்டுத்தாவணி பகுதியில் உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கின. ஒவ்வொரு நாளும் டைடல் பார்க் பணிகள் விறுவிறுவென நடந்து வந்தது. அதன் அருகிலேயே வண்டியூர் சுந்தரம் பார்க் பணிகளும் நடக்க, இன்னொரு பக்கம் சிவகங்கை சாலை முதல் கோரிப்பாளையம் வரையிலான பாலம் கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன.
டைடல் பார்க் பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் திமுக ஆட்சி முடிவதற்கும் டைடல் பார்க் பணிகள் முடிக்கப்பட்டு உடனடியாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை டைடல் பார்க் கட்டிடம் 6 தளங்கள் கட்டப்படுவதோடு, 72 மீட்டர் உயரத்திற்கு கட்டப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னைக்கு வெளியில் கட்டப்படும் மிகவும் உயரமான கட்டடமாக மதுரை டைடல் பார்க் டைடல் உருவாக உள்ளது. தற்போது அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் பில்டிங் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மதுரையே விரைவில் மாறும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications