வாகன ஓட்டிகளுக்கு வந்துருச்சு மெசேஜ்.. இந்த 2 நாளும் வண்டிகள் திருப்பிவிடப்படும்.. இதுதான் மதுரை ரூட்
மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா சிறப்பு பெற்றது.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வாகும்.
அந்தவகையில், சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மன் ஆகியோர் இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்டு வந்தனர்.

பக்தர்கள்: சுவாமிகளை பசுமலையை அடுத்த மூலக்கரை அருகே உள்ள சந்திப்பு மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்..
இதனிடையே, திருப்பரங்குன்றம் கோயில் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் 2 நாட்களுக்கு போக்குவரத்தில் அதிரடியான மாற்றங்களை போக்குவரத்து காவல்துறையினர் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
அறிக்கை: காரணம், சுப்பிரமணியசுவாமி கோயில் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெறுவதால், திருவிழாவை முன்னிட்டு அதிகப்படியான மக்கள் சுற்றுப்புறங்களில் இருந்து வருகை தருவார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே, போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கான போக்குவரத்து மாற்றம் தொடர்பான அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளனர்.
அறிக்கை விவரங்கள்:
I) திருநகரிலிருந்து மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள் கிரிவல பாதை மற்றும் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் GST சாலை வழியாக மூட்டா தோட்டம் சென்று நகருக்குள் செல்ல வேண்டும்.
II) மதுரை நகரிலிருந்து திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக திருநகர் செல்வதற்கு எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் மூட்டா தோட்டத்திலிருந்து GST சாலை வழியாக திருநகர் செல்ல வேண்டும்.
III) திருநகரிலிருந்து திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள காலி இடத்திலும் திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்திலுள்ள கட்டண வாகன நிறுத்தத்திலும் அவர்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.
IV) மதுரை நகரிலிருந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஒக்கலிக்கர் மண்டபம் அருகிலுள்ள தெப்பக்களம் கட்டண வாகன நிறுத்தத்திலும் இருசக்கர வாகனங்கள் திருப்பரங்குனற்ம் ஆர்ச்சிலிருந்து மயில் மண்டபம் வரை சாலையின் இருபுறங்களிலும் Single Parking-ஆக நிறுத்த வேண்டும்.
V) திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்திலிருந்து திருப்பரங்குன்றம் சன்னதி தெரு வரை, DC அலுவலகத்திலிருந்து லாலா கடை வரை மற்றும் நான்கு ரத வீதிகளிலும் எந்த ஒரு வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது.
VI) அவனியாபுரத்திலிருந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் சரவண பொய்கை வாகன நிறுத்தத்திலும் அதற்கு அருகில் உள்ள கட்டண வாகன நிறுத்தத்திலும் நிறுத்த வேண்டும்.
VII) அவனியாபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக நிலையூர் மற்றும் திருநகர் செல்லக்கூடிய பொது போக்குவரத்து இலகு ரக வாகனங்கள் அனைத்தும் KV பள்ளியின் வலது புறம் திரும்பி தியாகராஜர் பொறியியல் கல்லூரி சாலை வழியாக GST ரோடு சென்று செல்ல வேண்டும்.
VIII) மேற்படி சாலை வழியாக வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் அவனியாபுரம் முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பன் நகர் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.
IX) திருக்கோவிலுக்கு வரும் அரசு வாகனங்கள் அனைத்தும் அருணகிரி திருமண மண்டப வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
X) மதுரை நகரிலிருந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகிலுள்ள மேம்பாலத்திற்கு கீழ் நிறுத்த வேண்டும்.
XI) ஹார்விப்பட்டி மற்றும் நிலையூரிலிருந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் நிலையூர் சந்திப்பு அருகிலுள்ள ஆஞ்சிநேயர் கோவில் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
XII) மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மதுரை மாநகர் காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications