Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா மாறுதலில்.. மதுரையில் தலைகுனிந்த விஏஓ.. தென்காசி மூக்கை துளைத்த "கொய்யா பணம்".. நம்பவே முடியல

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் அரசு ஊழியர்கள் சிலர் லஞ்சம் வாங்கி கைதாவது பெருகி வருகிறது.. தென்காசி நகராட்சியில், டெண்டர் வைப்புத் தொகையில் சமீபத்தில்தான் ஒருவர் லஞ்சம் வாங்கி கைதாகியிருந்தார்.. பிறகு 2 நாட்களுக்கு முன்பு, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரும் லஞ்சம் வாங்கி கைதாகியிருந்தார்.. இந்நிலையில், மதுரையில் ஒரு பெண் அதிகாரி சிக்கியிருக்கிறார்.. என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் அரசு துறைகளில் லஞ்ச லாவண்யங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் அப்பட்டமாக அசிங்கப்பட்டு, கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. இதில், பெண் அதிகாரிகளும் அடிக்கடி கைதாவது கவலையை தந்து கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்புகூட தென்காசி பெண் போலீஸ் அதிகாரி கைதாகியிருந்தார்.

Patta change Madurai Tenkasi

தென்காசி செல்வக்குமார்

அதாவது, நெல்லை பணகுடியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் ஸ்டேசனில் ஆள்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற செல்வ குமார், கடையம் போலீஸ் ஸ்டேசனில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை செல்வகுமார் சந்தித்து பேசியபோது, ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விரைந்து வெளியே எடுத்து தருவதாக இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா சொன்னாராம்.


கொய்யாப்பழம் வாசனை

லஞ்சப்பணத்தை கொடுக்க விரும்பாத செல்வகுமார், தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தரவும், அவர்களின் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய பணத்துடன் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவிடம் சென்றுள்ளார்..

ஆனால், அந்த ரூபாய் நோட்டுக்களை அப்படியே கொண்டு செல்லாமல் அன்பளிப்பாக பழம் தருவதை போல, வெளியே தெரியாமல் இருக்க, வாசணை வீசும் கொய்யாப்பழம், பணம் அடங்கிய பையோடு கடையம் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றாராம் செல்வக்குமார்,., அந்த பணத்தை பெண் அதிகாரி கைநீட்டி வாங்கியபோதுதான் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.

மதுரை விஏஓ

இதோ இன்று இன்னொரு பெண் அதிகாரி மதுரையில் கைதாகியிருக்கிறார்.. மதுரை மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் மலைச்செல்வம். இவர் தன்னுடைய அப்பா ராமு பெயரில் உள்ள இடத்தை பட்டா மாறுதல் செய்ய கச்சிராயன்பட்டி விஏஓ துரைப்பாண்டியிடம் மனு கொடுத்தார். மனுவை பரிசீலனை செய்த விஏஓ, பட்டா மாறுதலுக்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். 7,000 தருவதாக மலைச்செல்வம் ஒப்புக்கொண்டார். லஞ்ச விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார்.

போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 7,000 ரூபாயை விஏஓ துரைப்பாண்டியின் தனிப்பட்ட உதவியாளர் சுந்தர்ராஜபுரம் பாக்கியலட்சுமியிடம் மலைச்செல்வம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் துரைப்பாண்டி, பாக்கியலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்படி அரசு அதிகாரிகளும் தொடர்ந்து கைதாவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. அத்துடன் பெண் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கி ஓயாமல் பொதுவெளியில் அசிங்கப்பட்டு கொண்டிருப்பது, பொதுமக்களுக்கு கவலையை உண்டுபண்ணி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+