மதுரை சிட்னியை போல் மாறும்... அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் உறுதி
மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை போல் மதுரை விரைவில் மாறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் உறுதியளித்துள்ளார்.
மாசில்லா மதுரை திட்டத்தின் கீழ் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். ரோம் நகரை உருவாக்கியது போல் மதுரையை நல்ல மதுரையாக, மாமதுரையாக மாநகராட்சி அதிகாரிகள் உருவாக்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இவரது புகழாரத்தை கேட்டு அருகில் இருந்த அதிகாரிகளே கூச்சத்தில் நெளிந்தனர். மதுரை ஒரு தொண்மையான நகரம் என்றும், அதிலுள்ள பழமை மாறாமல் பாதுகாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போல் மதுரை மாறும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதை அவர் கூறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே மதுரையை சிட்னியாக மாற்றுவேன் என கடந்த 6 மாதத்திற்கு முன் தெரிவித்திருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனத்திற்கு உள்ளாகியது. இப்போது மீண்டும் சிட்னி நகரை கையில் எடுத்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
இந்தாண்டு இறுதிக்குள் வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காதவாறு மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவடையும் என்றும், மதுரை மாநகராட்சி பணிகளை பாராட்டி மதுரை இளைஞர்கள் வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பி வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மதுரை சிறந்த நகரமாக தேர்வு செய்ய இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை மதுரை மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரினார். மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அதன் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications