செந்தில் பாலாஜி ஒன்னும் தியாகி அல்ல.. அவர் ஒரு சுயநலவாதி.. அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் தாக்கு
மதுரை: ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்ட யாரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

கருதவில்லை
அப்போது அவர் கூறுகையில் திமுகவுக்கு சென்ற செந்தில் பாலாஜி ஒன்றும் தியாகி கிடையாது. எங்களை பொருத்தவரை அவர் ஒரு சுயநலவாதி, தினகரன் அணியை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

ஏற்க மாட்டோம்
எங்களை பொறுத்தவரை அவர் ஒரு சுயநலவாதி. தினகரன் அணியை பொருட்படுத்த மாட்டோம். ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்ட யாரும் தி.மு.க.வுக்கு செல்லமாட்டார்கள்.

முக்கியம்
கஜா புயல் நிவாரண பணிகளை பிரதமர் மோடி பார்க்க வராதது ஒரு பொருட்டல்ல. இருப்பினும் தமிழகம் கேட்ட நிதி, மத்திய அரசிடம் இருந்து கிடைப்பது தான் முக்கியம் என்றார்.

269 பயனாளிகளுக்கு
மதுரை மேற்கு தாலுகா கொடிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். விழாவில் 269 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications