கமிஷன் தான் முக்கியம்.. எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி தேர்தலை தடுக்கிறார்... ஸ்டாலின் பேச்சு
Recommended Video
திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை திட்டமிட்டு தடுக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், டெண்டர்களில் கமிஷனை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கும் நோக்குடன் தேர்தலை தடுக்கிறார் என்றார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழல் உள்ளது என்று அதிமுக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும், 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாநில தேர்தல் ஆணையமே தானாக முன்வந்து தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தை வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது என தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் நீதிமன்றத்தில் மாறி, மாறி கூறி வருவது கண்டனத்திற்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications