Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனமழையால் சரிந்து விழுந்த வாழைமரங்கள்.. நிவாரணத்திற்கு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கனமழையால் மண்ணில் சரிந்த வாழைக்கு உரிய இழப்பீட்டை வழங்க திருப்பரங்குன்றம் எம்எல்ஏ பா சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி கிராமத்தில் 40 ஏக்கர் அளவிலான வாழை தோப்பில் பயிரிடப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்பிலான 5000-க்கும் மேற்பட்ட தார் ஈன்ற வாழை மரங்கள் மண்ணில் சரிந்தது.

 MLA Saravanan takes necessary steps for Plaintain farmers

இதனை கிராம விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் MLA பார்வைக்கு எடுத்து சென்றனர். தகவல் அறிந்த டாக்டர்.சரவணன் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு மதுரை மாவட்ட ஆட்சியாளரை தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டார்.

மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு, கணக்கீட்டின் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 MLA Saravanan takes necessary steps for Plaintain farmers

கொரோனா ஊரடங்கில் விவசாயிகளும், பொதுமக்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வரும் நிலையில் தற்போது கனமழையில் வாழை மரங்கள் சரிந்ததால் விவசாயிகள் சோர்ந்து போயிருந்தனர்.

 MLA Saravanan takes necessary steps for Plaintain farmers

இந்நிலையில் விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொன்டு உடனடி நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+