களமிறங்கிய நயினார் நாகேந்திரன்.. மதுரையில் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய பாஜக தலைவர்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற முழக்கத்துடன் மதுரையில் தேர்தல் சுற்றுப்பயணத்தை பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தொடங்கினார். இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எச் ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். இந்த தேர்தலில் அதிமுகவுடன், பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார்.

nainar-nagendran-starts-bjp-election-campaign-from-madurai-today

இதன் அடுத்தக்கட்டமாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். ‛தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தார்.

இதற்கானக தொடக்க விழா மதுரை அண்ணா நகரில் உள்ள அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நடந்தது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, எச் ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த பிரசார சுற்றுப்பயணத்தை நாளை நயினார் நாகேந்திரன் சிவகங்​கையில் மேற்கொள்ள உள்ளார். அதன்பிறகு அக்டோபர் 14-ம் தேதி செங்​கல்​பட்டு வடக்​கு, அக்டோபர் 15-ம் தேதி சென்னை வடக்​கு, 16-ம் தேதி மத்​திய சென்​னையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்பிறகு தீபாவளியையொட்டி ஓய்வு எடுக்கிறார். பிறகு அக்டோபர் 24-ம் தேதி அரியலூர், பெரம்​பலூர், 25-ம் தேதி தஞ்​சாவூர் வடக்​கு, 27-ம் தேதி திருச்​சி, 28-ம் தேதி திண்​டுக்​கல் கிழக்​கு, 29-ம் தேதி நாமக்​கல் கிழக்​கில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறார்.

அதன்பிறகு நவம்பர்3-ம் தேதி ஈரோடு தெற்​கு, 4-ம் தேதி கோவை வடக்​கு, 5-ம் தேதி நீல​கிரி, 6-ம் தேதி திருப்​பூர் தெற்கு என தொடர்ந்​து, சேலம், தர்​மபுரி, தஞ்​சாவூர் தெற்கு என 28 நாட்​கள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் நயி​னார் நாகேந்​திரன் நவம்பர் 22-ம் தேதி தூத்​துக்​குடி தெற்​கில் நிறைவு செய்​கிறார். அதன்பிறகு இரண்​டாம்​கட்ட பயணத்தை தேனி​யில் நவம்பர் 24-ம் தேதி தொடங்​கி பிற இடங்களில் பயணிக்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+