நிர்மலாதேவிக்கு ஏன் ஒரு வருடமாக ஜாமீன் தரலை.. பெரிய இடத்து தொடர்பு இருக்கா.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி
நிர்மலாதேவி வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை: "ஒரு வருஷம் ஆக போகுது.. ஏன் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் இன்னும் வழங்கப்படவில்லை.. அவர் என்ன சூப்பர் குற்றவாளியா?" என்று மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. அத்துடன் நிர்மலாதேவி வழக்கு குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விசாரணை நடத்தவும் இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீதான விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலர் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

ஜாமீன்
அப்போது நீதிபதிகள், தெரிவித்ததாவது: "நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை முழு திருப்தியாக இல்லை. வழக்கை முறையாக விசாரிக்காமல் மூவரை மட்டுமே விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஓராண்டாக நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்காதது ஏன்?

பெரிய இடத்து தொடர்பு?
கொலை குற்றவாளிகளுக்கு கூட ஜாமீன் கிடைக்கும்போது, நிர்மலா தேவிக்கு ஒரு வருஷமாக ஜாமீன் தர மறுப்பது ஏன்? அவர் சூப்பர் குற்றவாளியா ? ஜாமீன் வழங்குவதில் உள்ள எதிர்ப்பை பார்க்கும் போது பெரிய இடத்து தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுவது இயற்கைதான்.

சரமாரி கேள்வி
ஏன், அவருக்கு ஜாமீன் வழங்குவதில் ஏதாவது அச்சம் உள்ளதா? வழக்கை நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய 3 பேரை மட்டும் வைத்து முடிக்க திட்டமா என்ற சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். பின்னர், நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள், உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணை
மேலும் இது சம்பந்தமாக தமிழக அரசு, சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலாதேவி உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று சொல்லி, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 18-க்கு ஒத்திவைத்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications