திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது- அரசு மற்றும் தர்கா தரப்பு ஐகோர்ட்டில் உறுதி

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது என்றும் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என்றும் அரசு மற்றும் தர்கா தரப்பு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.

மதுரை சோலை அழகுபுரத்​தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்​தி என்பவர், திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்காவில் கந்​தூரி விழாவுக்​குத் தடை விதித்து உத்​தர​விடக் கோரி உயர்​நீ​தி​மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்​கல் செய்த மனு​வில், திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் அமைந்​துள்ள சிக்​கந்​தர் பாதுஷா தர்​கா​வில் கடந்த ஆண்டு நடந்த கந்​தூரி விழா​வில் அசைவ உணவு​கள் பரி​மாறப்​பட்​டன.

Thiruparankundram high court

இதற்கு எதி​ராக உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில், திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழிகளைப் பலி​யிட தடை விதிக்​க​வும், மலை​யில் அசைவ உணவு சமைக்​க​வும், பரி​மாற​வும் தடை விதிக்​கக்​கோரி வழக்​குத் தொடரப்​பட்​டது. இந்த வழக்​கு​களை விசா​ரித்த உயர் நீதி​மன்ற கிளை, திருப்​பரங்​குன்​றம் மலை​யில் ஆடு, கோழி பலி​யிட தடை விதித்​தும், இந்த உரிமையை நிலை நாட்ட உரிமை​யியல் நீதி​மன்​றத்தை அணுக​வும் உத்​தர​விட்​டது.

இந்த உத்​தர​வுக்கு எதி​ராக தர்கா நிர்​வாகம் சார்​பில் மேல்​முறை​யீடு செய்​ய​வில்​லை. இதனால் உயர் நீதி​மன்ற அமர்வு உத்​தரவு இறு​தி​யானது. இந்​நிலை​யில், சிக்​கந்​தர் தர்காவில் கடந்த 21 ஆம் தேதி கந்​தூரி மற்​றும் சந்​தனக்​கூடு விழா தொடங்​கியது. வரும் ஜனவரி 6 ஆம் தேதி வரை விழா நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த ​விழா​வில் ஆடு, கோழி பலி​யிட​வும், அசைவ உணவு சமைக்​க​வும் வாய்ப்​புள்​ளது. எனவே, கந்​தூரி விழாவுக்​குத் தடை விதித்து உத்​தர​விட வேண்​டும் என மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிபதி ஜோதி​ராமன் முன்​னிலை​யில் அண்மையில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி, மனு தொடர்​பாக தர்கா நிர்​வாகத் தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டு, விசா​ரணையை இன்றைய தேதிக்கு தள்​ளி​ வைத்​திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது என்றும் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என்றும் அரசு மற்றும் தர்கா தரப்பு உறுதி அளித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை உள்ளது என்றும் அரசுத் தரப்பு வாதம் வைத்தது. இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+