தனியாக துண்டாகிப் போன தலை.. மதுரை பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் பலி.. பகீர் சம்பவம்!
மதுரை: மதுரை விளாங்குடியில் பாதாளச் சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சி விளாங்குடிக்கு உட்பட் 20 வது வார்டில் புதிதாகப் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் நான்குக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், இன்று வழக்கம் போலப் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. பாதாளச் சாக்கடையில் பணியின்போது மண் சரிந்து முதலில் ஊழியர் ஒருவர் மண்ணுக்குள் புதைந்து உள்ளார்.
உடனடியாக அங்கு இருந்த சமூக ஆர்வலர் கந்தன் என்பவர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சிக்கி இருந்தவரை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாகக் கொண்டு அவரை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால் மீட்பு பணியின் போது எதிர்பாராத விதமாக போக்லைன் இயந்திரம் பட்டு அவரது தலை துண்டானதாகக் கூறப்படுகிறது. அவரது தலை மட்டும் தனியாக முதலில் எடுக்கப்பட்டுவிட்டது.
இதையடுத்து இப்போது உடலை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர் உயிரோடு இருந்த போது தலை துண்டாகி எடுக்கப்பட்டதா அல்லது உயிரிழந்த பின்னர், இந்தச் சம்பவம் நடந்ததாக என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து இதுபோல பணிகளின் போது மதுரை மாநகரில் ஏற்படும் அசம்பாவிதங்கள் மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திவிட்டு இதுபோன்ற வேலைகளைச் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications