Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக மாநாட்டில் வந்து நின்ற லாரிகள்.. குழாயை திறந்தால் ஆரஞ்ச் நிற தண்ணீர்.. கேட்டால் குளுகோஸாம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாநாட்டில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் வெயிலில் சோர்வடையாமல் இருக்க லாரியில் இருந்து குழாய் மூலம் குளுகோஸ் வழங்கப்பட்டது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கான செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் நேற்றைய தினம் மதுரையில் மாநாடு நடத்தப்பட்டது.

Orange flavour glucose juice was given to aiadmk cadres in Madurai

இந்த மாநாட்டில் தொண்டர்களுக்கு சைவ உணவு அண்டா அண்டாவாக தயார் செய்யப்பட்டது. அது போல் அவர்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டது. 10 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.

சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி குவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாடாக இருந்தாலும் , வீட்டு சுபவிசேஷமாக இருந்தாலும் பசிக்கு உணவு என்பது முக்கியமான விஷயம். ஆனால் இந்த அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் உப்பு, உறைப்பு ஏதும் இல்லை. அது போல் புளி சாதமும் வேகவே இல்லை என தொண்டர்கள் குற்றம்சாட்டினர்.

Orange flavour glucose juice was given to aiadmk cadres in Madurai

இதனால் பசியோடு வந்து சாப்பிட முடியாமல் அவர்கள் வாங்கிய சாப்பாட்டை ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு சாப்பிட முடியாமல் தூக்கி வீசிவிட்டு சென்றனர். ஆங்காங்கே ஒரு வேளை உணவுக் கூட இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் உணவை சரியாக சமைக்காமல் இப்படி வீணடிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

பாக்கு மர தட்டுகளில் பரிமாறப்பட்ட உணவுகள் குப்பைகளுக்கு சென்றதால் பலர் வருத்தமடைந்தனர். இப்படியெல்லாம் உணவை வீணடிக்கும் அளவுக்கா கேட்டரிங் கலைஞர்கள் சமைப்பார்கள் என கேள்வி எழுந்தது. தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்க ஆரஞ்ச் ஃபிளேவர் கொண்ட குளுகோஸ் வழங்கப்பட்டது.

அந்த குளுகோஸ் லாரிகளில் வழங்கப்பட்டது. கார்பரேஷன் வாட்டர் விடுவது போல் உள்ளுக்கு குடிக்கும் குளுகோஸ் வழங்கப்பட்டது. அதிலும் தண்ணீர் கலக்கப்பட்டது. சர்க்கரை சரியாக இல்லை. இதை முண்டியடித்து வாங்குவதற்கு பேசாமல் பச்சை தண்ணீரை குடித்துவிடலாமே என்ற தொண்டர்கள் கருதும் நிலை இருந்தது.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து 1000 முதல் 1500 வாகனங்களில் தொண்டர்கள் வந்தனர். அவர்களுக்கு கைச் செலவுக்காக ரூ 100 கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இப்படி வெளியூரில் இருந்து வந்த தொண்டர்களுக்கு உணவும், குளுகோஸ் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட தண்ணீரும் சரியில்லாமல் இருந்தால் எப்படி? எல்லாரும் உழைப்பதே ஒரு ஜான் வயிற்றுக்காகத்தான்!

லாரிகளில் சுகாதாரம் இல்லாமல் ஜூஸ் வழங்கலாமா, 10 லட்சம் பேருக்கான உணவுக்கே பாத்திரம் இருந்த போது இது போன்ற ஜூஸுக்கு ஏதாவது ஒரு பாத்திரங்களில் வைத்து கொடுத்திருக்கலாம். இல்லாவிட்டால் சிறிய பெட் ஜார்களில் எத்தனையோ ஜூஸ்கள் வந்துவிட்டன. அவற்றை கொடுத்திருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு பச்சதண்ணீரை குளுகோஸ் என கொடுத்து ஏமாற்றியுள்ளனர் என தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஓபிஎஸ் கூறுகையில் எடப்பாடி பழனிசாமியின் மாநாடு தோற்றுவிட்டது. 2 நாளுக்கு முன்னாடி கிளறிய புளி சாதத்தை கொடுத்துள்ளனர். இதனால் தொண்டர்கள் சாப்பிட வழியில்லாமல் தவித்து கொல பட்டினியாக இருந்தது வேதனை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+