பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கலையா.. மதுரை மண்டலத்தில் 8 மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்
மதுரை: மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்காக அடுத்த மாதம் 12-ந் தேதி குறை தீர்ப்பு முகாம் நடத்துகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடு போக முடியாது. அதற்கு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாஸ்போர்ட் சேவா இணையதளம் https://www.passportindia.gov.in/ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதில் பதிவு செய்த பின்னர், வீட்டிற்கு அருகில் உள்ள "Passport Office"-ஐத் தேர்வு செய்து, இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட்டை பொறுத்தவரை சாதாரண வகை மற்றும் தட்கல் வகை என இரு வகை ஆப்ஷன்கள் உள்ளன.

விண்ணப்பித்த பின்னர், போலீஸ் விசாரணைக்கு பின்னர் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பலருக்கும் பாஸ்போர்ட் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். அவர்களுக்காக முகாம்கள் மதுரை மண்டலத்தில் நடைபெற உள்ளது.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "இந்திய வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட் சேவைப்பிரிவின் கீழ் செயல்படும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்காக அடுத்த மாதம் 12-ந் தேதி குறை தீர்ப்பு முகாம் நடத்துகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாமில், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அதாவது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்கு முன்னதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தும் பாஸ்போர்ட் கிடைக்காத மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், சுய கையப்பமிட்ட விண்ணப்ப கடிதத்தில் தங்களது பாஸ்போர்ட் விண்ணப்ப எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு விரைவு தபால் மூலம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாரதி உலா வீதி, ரேஸ் கோர்ஸ் ரோடு, மதுரை-625002 என்ற முகவரிக்கு வருகிற 4-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் "பாஸ்போர்ட் குறைதீர்ப்பு முகாம்-2025" என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். அத்துடன், விண்ணப்ப நகலை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 4-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications