மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்!
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் டிடிவி தினகரனின் அமமுக எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்தும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தினகரன் கட்சி 39 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் போட்டியிடுகிறார்.

வழக்கறிஞர்
இவர் வேறு யாரும் இல்லை. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றம்சாட்டப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஆஜரான வழக்கறிஞர் ஆவார்.

அரசியல் ரீதியாக
இவர் இன்று மதுரை தேர்தல் அதிகாரி நடராஜனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உள்பட அனைவரும் அரசியல் ரீதியாக எனக்கு தகுதியானவர்கள் கிடையாது.

கேள்வி
தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துவிட்டனர் என்றார். நிர்மலா தேவியை பிரசாரத்துக்கு அழைப்பீர்களா என்ற கேள்விக்கு நிர்மலா தேவிக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

சட்ட போராட்டம்
சிறையில் சக கைதிகளை விட்டு நிர்மலா தேவியை மூச்சைப் பிடித்து கொல்லப் பார்த்துள்ளனர். நிர்மலா தேவிக்கு பெரிய சட்ட போராட்டமே நடத்தி ஜாமீன் பெற்று தந்துவிட்டேன்.

பிரசாரம்
விபசார விடுதியாகவே மாறிவிட்ட மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் பாலியல் சம்பவங்கள், ஆளும் கட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எனது பிரசாரம் இருக்கும். மதுரை நாடாளுமன்ற தொகுதியை இந்தியாவின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன். அதனை நிருபிக்கும் வகையில் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன். மூடிய தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications