மதுரை மக்களை நள்ளிரவில் அலற விட்ட பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்.. சிக்கிய 4 சிறுவர்கள்!
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நள்ளிரவில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் தூங்காமல் வீதிகளில் திரண்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார், 4 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். மது போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாக அந்தச் சிறுவர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையின் முக்கிய பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசி அலறவிட்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரத்தில் நள்ளிரவில் மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுவீசி மக்களை அச்சுறுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மதுரையையே கதிகலங்க விட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வழக்கம்போல பொதுமக்கள் இரவு நேரத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து எழுந்தனர். என்ன நடந்தது? என்று தெரியாமல் வெளியே வந்து பார்த்தபோது மகாலட்சுமி கோயில் தெரு வழியாக 4 மர்ம இளைஞர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது மறைந்ததைப் பார்த்துள்ளனர்.
அப்போதுதான் அவர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரியவந்தது. அது தொடர்பாக போலீசில் புகார் அளித்து பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என கண்டுபிடிப்பதற்குள் அதே கும்பல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி முதல் தெருவிலும் பெட்ரோல் குண்டுவீசி அலறவிட்டுள்ளனர். அங்கும் அவர்கள் யார் கண்ணிலும் சிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு முழுக்க உறங்காமல் அச்சத்தில் வீதியில் கூடியிருந்தனர்.
கடந்த சில மாதங்களாக மதுரையின் சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இதுபோன்ற கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாகவும் பல்வேறு குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிசிடிவி கேமிராவில் மர்ம இளைஞர்களின் முகம் பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார், 4 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். மது போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாக அந்தச் சிறுவர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுவர்கள், மது போதையில் பெட்ரோல் குண்டுகளை வெடிக்கச் செய்த சம்பவம் மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications