டிரைவிங் லைசென்ஸ்சை ரத்து செய்யும் போலீஸார்... உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
மதுரை: விபத்து தொடர்பான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்குள் டிரைவிங் லைசென்சை போலீசார் ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அச்சுறுத்தும் வகையில் ரேஸ் வைத்து வாகனம் ஓட்டுவோர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவோர், அலட்சியமாக வாகனம் ஓட்டி மோசமான விபத்து ஏற்படுத்துவோரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம் விபத்துகளை பொருத்து பொதுவாக 3 - 6 மாதங்கள் வரை லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது.

குறிப்பாக சொல்வது என்றால், விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம், ஆறு மாதம் முதல் 1 ஆண்டு வரை ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தியவர்களின் லைசென்ஸ் கண்டிப்பாக ரத்து செய்யப்படுவது வழக்கம்..
இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கார் டிரைவர் ஆவார். இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் சங்கரன்கோவிலில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக நான் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இறந்துவிட்டார். இதுகுறித்து என் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். அதன்பேரில் எனது டிரைவிங் லைசென்சை 6 மாதத்துக்கு ரத்து செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். என் மீது வேறு எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே எனது டிரைவிங் லைசென்சை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதித்து, எனக்கு மீண்டும் லைசென்ஸ் வழங்க உத்தரவிட வேண்டும்... இவ்வாறு மனுவில் டிரைவர் நாகராஜன் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, 'கார் விபத்தில் சிக்கியதற்காக, டிரைவிங் லைசென்சை காவல்துறையினர் பறிமுதல் செய்ய முடியாது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. மேலும் மனுதாரர் மீதான வழக்கில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்குள் அவரது லைசென்சை வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்ய அதிகாரம் இல்லை. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே மனுதாரரிடம் ஒருவாரத்தில் அவரது லைசென்சை திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications