திருப்பரங்குன்றம் மலையில் ஆடு அறுக்க முயற்சி.. பள்ளிவாசல் நிர்வாகிகளை தடுத்த போலீஸ்.. என்ன நடந்தது?
மதுரை: ஆடு, கோழியுடன் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது உயிர்ப்பலி கொடுக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினர் பள்ளிவாசல் நிர்வாகிகளை தடுத்திருப்பது வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மதநல்லிணத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. மலைக்கு கீழ் சுப்பிரமணிய சுவாமி கோவிலும், மலை மீது சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவும் இருக்கிறது. இந்து மற்றும் இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்கு சான்றாக இந்த இடம் இருப்பதாக மக்கள் பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக சிக்கந்தர் தர்காவில் கந்தூரி நடத்த ஆடு, சேவலுடன் சென்றவர் தடுத்து நிறுத்தப்பட்டார். மலை மீது உயிர்ப்பலி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியதால், இஸ்லாமியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பேசுபொருளானது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தர்காவில் நேற்றிரவு சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
இதனால் வழிபாடு நடத்த வந்த இஸ்லாமியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பிறகே மலை மீது ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை ஆடு, கோழி பலியிட்டு சமபந்தி விருந்து நடைபெறும் என்றும், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று செய்திகள் சோசியல் மீடியாவில் பரவியது.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை மீது கந்தூரி நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருப்பரங்குன்றம் மலை மீது ஏறும் பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி அறுக்க இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் தடுத்த நிறுத்தப்பட்டு, தர்காவில் வழிபாடு நடத்த மட்டுமே அனுமதி இருக்கிறது. ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆடுகளை தங்களின் தோள்களில் போட்டு கொண்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆடுகளுடன் மலை மீது ஏற முயற்சித்த போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதன்பின் கோஷங்கள் மட்டும் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீண்டும் பள்ளிவாசல் நோக்கி சென்றதால், திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications