ஆபாச பட ஆசிரியைக்கே ’அல்வா’ ! லேப்டாப் டீச்சரிடம் ஆட்டைய போட்ட கேடி ஜெயா..! என்னென்ன பண்ணிருக்காங்க?
மதுரை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் சிறையில் இருக்கும் ஆசிரியை உடன் பழகி அவரை ஜாமீனில் எடுக்க உதவுவதாகக் கூறி வீட்டில் புகுந்து நகை பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இது குறித்து மதுரை மாநகர போலீசாருக்கு தகவல் வந்தது.
இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்ட நிலையில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
பாராலிம்பிக்கில் மகத்தான சாதனை! மூன்று தங்கம் அள்ளிய மதுரை மாணவி ஜெர்லின்! வாழ்த்திய டிடிவி தினகரன்
மதுரையில் அதிர்ச்சி
விசாரணையில் அந்த வீடியோவில் இருந்தது மதுரை பெத்தணியாபுரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் ராதிகா என்பதும், தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களை மிரட்டி அவருடன் உல்லாசமாக இருப்பது அவற்றை வீடியோவாக எடுத்து மற்ற மாணவர்களுக்கும் காட்டி அவர்களையும் தனது வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்தது தெரியவந்தது. ஒரு பெண்ணுடன் 2, 3 ஆண்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பார்த்த ஆசிரியை தானும் அதே போல் இருக்க வேண்டும் என்று தன்னிடம் ட்யூசன் படித்த மாணவர்களை மிரட்டியும் மயக்கியும் இந்த விபரீதத்தில் ஈடுபட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறையில் ஆசிரியை
இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இதேபோல் மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகாசி அருகே பள்ளபட்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்த ஜெயா என்பவருக்கும் சிறையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பாக பழகிய ஜெயா ராதிகாவிடம் நான் விரைவில் விடுதலையாகி வெளியே சென்று விடுவேன் வெளியே சென்றதும் உன்னை எப்படியாவது ஜாமீனில் எடுக்க முயற்சி மேற்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆறுதல் வார்த்தைகளை ஜெயிலில் இருக்கும் போது ஜெயா ராதிகாவிடம் கூறி வந்துள்ளார். இதனை நம்பிய ராதிகா தன்னுடைய வீட்டு முகவரி கொடுத்துள்ளார்.
கைதியுடன் பழக்கம்
இதனையடுத்து கடந்த வாரம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஜெயா, ராதிகா வீட்டிற்கும் மற்றும் ராதிகாவின் உறவினர் வீட்டுக்கும் சென்று நாங்கள் ஜெயிலில் நட்பாகப் பழகி வந்தோம் எப்படியாவது ராதிகாவை ஜாமீனில் எடுக்க வேண்டும் என்றும் ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்துள்ளார் . இதனையடுத்து ஜெயாவின் பேச்சை நம்பிய ராதிகாவின் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மீண்டும் இரு தினங்களுக்கு பின் உறவினர் வீட்டிற்கு ஜெயா சென்றுள்ளார். அப்போது ஆசிரியர் ராதிகாவின் உறவினர் நீங்கள் வீட்டில் இருங்கள் நான் அருகில் உள்ள கடைக்கு சென்று வருகிறேன் என்று ஜெயாவிடம் கூறிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.
நகை பணம் திருட்டு
இதனையடுத்து அவர் வீட்டிற்கு வருவதற்குள் நைஸாக வீட்டிலிருந்த லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டு தலைமறைவாகிவிட்டார் ஜெயா. வீட்டுக்கு வந்த ராதிகாவின் உறவினர் தங்கள் பொருட்களை இழந்ததை கண்டு அதிர்ச்சியுற்று கரிமேடு காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார் இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஜெயாவை கைது செய்து அவரிடம் இருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர் அதனைதொடர்ந்து ஜெயா மீது வழக்கு பதிவு செய்து மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைந்துள்ளனர்.