Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயிலில் இருந்து எஸ்கேப் ஆன ஆயுள் தண்டனை கைதி.. மதுரை மத்திய சிறையில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். நன்னடத்தை காரணமாக சில மாதங்கள் தோட்ட வேலைகள் செய்ய ஜெயக்குமாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

Prisoner escapes from madurai central jail

இந்நிலையில், சிறை வளாகத்தினுள் வழக்கம் போல தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த ஜெயக்குமார் தோட்டத்தில் கைதிகள் வேலை செய்துவிட்டு மாலை சிறைக்குள் செல்லும்போது திடீரென தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

சிறை வளாகம் முழுவதும் ஜெயக்குமாரை காவலர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறைக் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் கரியமேடு போலீசார் தப்பி ஓடிய கைதி ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+