தொலைந்து போன சொத்து ஆவணங்களை மீண்டும் பெறுவதில்.. இப்படியும் சிக்கலா.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சொத்து ஆவணங்கள் மாயமானது தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சொத்து ஆவணங்களை வழங்காததற்கு சாக்குப்போக்கு கூறுவதை ஏற்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், என்னுடைய உறவினர் புஷ்பம் என்பவருக்கு, சொந்தமாக விருதுநகர் மாவட்டம் மீஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் இருந்தது. அவர் இறந்த பின்பு அந்த சொத்தை அவருடைய மகன் விஜய் ஆண்டனி, தனது பெயருக்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் சொத்து ஆவணங்கள் மாயமானது.

இதையடுத்து அந்த ஆவணத்தை பெறுவது சம்பந்தமாக விருதுநகர் மாவட்ட பொது தகவல் அதிகாரியிடம் ஆர்டிஐ சட்டத்தில் விண்ணப்பித்தார். அவர் பதில் அளிக்காததால், விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடமும், தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய அதிகாரிகளிடமும் விண்ணப்பித்தார். அதன் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய என்னை அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் என் சார்பில் விஜய் ஆண்டனி ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதி பெறப்பட்டது. ஆனால் பலமுறை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றார். அவரிடம் உரிய ஆவணங்களை விருதுநகர் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் வழங்கவே இல்லை. இதன்மூலம் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையரின் உத்தரவு நிறைவேற்றப்படாமல் அவமதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிலத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யவும், மாவட்ட பொது தகவல் அதிகாரி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொது பதிவுகள் அனைத்தும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பராமரிக்கப்படும். பல்வேறு காரணங்களால் அவை அழிந்துபோக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பாலாஜி பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "மனுதாரர் நில ஒதுக்கீடு சம்பந்தமான ஆவணங்களை கோருகிறார். அவை தொலைந்துவிட்டன, அழிக்கப்பட்டன என்பதை ஏற்க முடியாது. சொத்து ஆவணங்கள் என்பது நிரந்தர பதிவாகும். எனவே மனுதாரருக்கு பதிவு ஆவணங்களை வழங்காததற்கு அதிகாரிகள் சாக்குபோக்கு கூறுவதை ஏற்க முடியாது. எனவே சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்து தேவையான தகவல்களை மனுதாரருக்கு வழங்க 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications