மதுரையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஊர் திரும்பிய போது திடீர் மரணம்
மதுரைக்கு நேற்று நீட் தேர்வு எழுத வந்த மாணவி திடீரென்று மரணமடைந்தார்.
Recommended Video
மதுரை: நீட் தேர்வு எழுத மதுரைக்கு வந்த மாற்றுத் திறனாளி மாணவி, சொந்த ஊருக்கு திரும்பி வரும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத மாணவ, மாணவிகள் மையங்களுக்கு திரண்டு வந்திருந்தனர்.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவரும் தேர்வு எழுதினார். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. நீட் தேர்வு எழுதுவதற்காக சொந்த ஊரிலிருந்து மதுரைக்கு வந்தார். தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிவிட்டு பஸ்ஸில் ஊர் திரும்பிகொண்டிருந்தார்.
திருப்புவனம் அருகே பஸ் சென்றபோது, சந்தியா திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து பஸ்ஸில் இருந்தவர்கள் பதறி போனார்கள். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தந்து, சந்தியாவை மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
நீட் தேர்வு எழுத வந்த மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் மதுரையில் மட்டுமல்லாது, ராமநாதபுரம் மாவட்டத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications