"சேலைக்குள்ளே".. 50 வயசாகுது.. மதுரையையே அதிர வைத்த 2 பெண்கள்.. ஆடிப் போன போலீஸார்!
சேலை திருடிய பெண்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை: கில்லாடி பெண்கள் ஜவுளிக்கடையில் செய்த சேட்டையை பார்த்து மதுரை பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பொதுவாக பண்டிகை காலங்களில், கடைத்தெருக்களில் கூட்டம் அலைமோதும்.. பல ஜவுளி கடைகளிலும் நெரிசல் மிகுந்த கூட்டம் காணப்படுவது இயல்பு.
இதனால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், அந்தந்த கடை ஊழியர்களும் சிசிடிவி கேமிராவில் கண்காணித்தபடியே இருப்பார்கள்.. பலர் அந்த வகையில் சிக்கியும் உள்ளனர்.
இப்போதும் பொங்கல் பண்டிகைக்கான பிஸியில் கடைகள் உள்ளன.. ஆனால், மதுரையில் ஒரு ஜவுளிக்கடையில் அவ்வளவாக கூட்டமே இல்லை.. கடைசியில் ஆட்கள் இருக்கிறார்கள்.. ஓனர் இருக்கிறார்.. சிசிடிவி கேமராக்களும் இருக்கின்றன.. இவ்வளவு இருந்தும் எதையுமே அந்த பெண்கள் கண்டுகொள்ளவில்லை.
மொத்தம் 4 பேர்.. மஹால் வடம்போக்கி தெருவில் உள்ளே இருக்கும் அந்த ஜவுளிக்கடைக்குள் நுழைகிறார்கள்.. ராமநாதன் என்பவர்தான் ஓனர்.. புடவை வாங்குவது போல 2 பெண்களும் 2 ஆண்களும் வருகிறார்கள்.. புடவைகளை எடுத்து ஒவ்வொன்றாக காட்டுகிறார்கள்.. ஆனால் அவர்கள் எதையுமே வாங்குவது போல தெரியவில்லை.
இதனால் தான் கடைக்காரர்களுக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது.. அதனால், அவர்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.. அப்போதுதான் அந்த பெண்கள் புதுபுடவைகளை எடுத்து, தங்கள் சேலைக்குள் டக்கென ஒளித்து வைத்து கொண்டனர்.. கடைக்காரர்கள் அந்த பக்கமாக திரும்பி இருக்கும்போது, புடவைகளை எடுத்து சேலைக்குள் வைத்து கொள்கிறார்கள்.
ஆர்வமாக செல்போன் பேசிய நபர்.. சட்டென நடந்த விபரீதம்.. சென்னையில் பதிவான பரபரப்பு சிசிடிவி காட்சி
இதை கடையில் இருந்தோர் கண்டுபிடித்துவிட்டனர்.. சிசிடிவி கேமிராவிலும் இது அப்படியே பதிவாகி இருந்தது.. கையும் களவுமாக அவர்களை பிடித்தபோது, 8 புடவைகள், அவர்கள் காலுக்கு அடியில் வந்து விழுகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓனர், தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார்.. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முத்துலட்சுமி 55, மோகன் 55, சுசி 55, செல்வி 49 என்பது தெரியவந்தது..
எல்லாருமே 50 வயதானவர்கள்தான்.. விசாரணையில் அவர்கள் அனைவரும் இதுபோல் கடைகளுக்கு சென்று சேலை உள்ளிட்ட ஜவுளி பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடுவதை வாடிக்கையாக வைத்து வந்தது தெரியவந்தது. இப்போது 4 பேரும் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.