சசிகலாவிற்கு ஆதரவாக.. இப்ப மதுரையிலும்.. அதிமுக மாவட்ட கவுன்சிலர் செய்த வேலையால்.. தலைமை ஷாக்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் பங்கேற்க மாட்டேன் ஒன்று சசிகலா ஒதுங்கி இருந்தார். ஆனால் அதிமுகவை மீட்கப்போவதாக தொண்டர்களிடம் அடிக்கடி பேசி வருகிறார். லாக்டவுன் முடிந்த பின் தொண்டர்களை ஊர் ஊராக போய் சந்தித்து பேசப்போவதாகவும் கூறி வருகிறார். நிச்சயம் தொண்டர்களை சந்திப்பேன். கட்சியை மீட்பேன் என்று சூளுரைத்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் சசிகலா பக்கம் வராத நிலையில், அவர் தொண்டர்களை குறிவைத்து களம் இறங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் இபிஎஸ் தலைமை, சசிகலா உடன் பேசும் நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வருகிறது. இதுவரை பலரையும் நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றம்

தீர்மானம் நிறைவேற்றம்

இது ஒருபுறம் எனில் சசிகலாவின் செயலை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில் முதல்முறையாக அஇஅதிமுகவுக்கு பொதுச் செயலாளராக சசிகலா தொடர வேண்டும் என விளாத்திகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக தீர்மானம்

ஆதரவாக தீர்மானம்

இந்த சூழலில் சசிகலாவின் பல்வேறு ஆடியோக்களுக்கு பிறகு, அவர் நிச்சயம் அரசியலில் இறங்குவார் என்று தெரிந்த கொண்ட அதிமுக நிர்வாகிகள் சிலர், அவருக்கு ஆதரவாக வெளிப்படையாக மாறி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் சசிகலாவிற்கு எதிராக அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது,

சசிகலா ஆதரவு போஸ்டர்

சசிகலா ஆதரவு போஸ்டர்

மதுரை திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய அண்ணாதொழிற்சங்க செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான கே.லெட்சுமிபதி ராஜன் என்பவர் சசிகலாவிற்கு ஆதரவாக "துரோகத்தை வீழ்த்த வரும் தியாகமே" என்ற வாசகங்களுடன் மதுரை திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், பெருங்குடி, அண்ணாநகர், செல்லூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

அதிமுக தலைமை ஷாக்

அதிமுக தலைமை ஷாக்

மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் சுவரொட்டி ஒட்டியுள்ளது. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை இவரது செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி சம்பவம் பூதாகரமாகி வரும் நிலையில் மதுரை சம்பவமும் ஒபிஎஸ்இபிஎஸ்க்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+