இரண்டு முறை குற்றவாளிகளை தூக்கிலிடுவார்களா? இரட்டை மரண தண்டனை என்றால் என்ன?
மதுரை: சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை கொடுக்க முடியும். அப்படி இருக்கையில் எப்படி இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இந்திய தண்டனை சட்டங்களை பொறுத்தவரை, ஒவ்வொரு கொலைக்கும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். சாத்தான்குளம் வழக்கும் அப்படித்தான்தான் நடந்திருக்கிறது.

ஒருவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு இரண்டு முறை மரண தண்டனை விதிக்கப்படுவதே 'இரட்டை மரண தண்டனை' எனப்படும். சாத்தான்குளம் வழக்கில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் என இருவர் கொல்லப்பட்டதால், ஒவ்வொரு கொலைக்கும் தனித்தனியாக ஒரு மரண தண்டனை என மொத்தம் இரண்டு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தந்தை மற்றும் மகன் என இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி (IPC/BNS) இரண்டு கொலைக் குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அல்லது அடுத்தடுத்து இரண்டு பேரைக் கொலை செய்வது 'அரிதினும் அரிதான' செயலாகக் கருதப்படுகிறது. இத்தகைய கொடூரமான குற்றங்களுக்கு உச்சகட்டத் தண்டனையை உறுதிப்படுத்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளிக்கும்.
நடைமுறையில் எப்படி நிறைவேற்றப்படும்?
நடைமுறையில் ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும், தூக்கிலிட முடியும். ஆனால், சட்டப்பூர்வமாக ஒரு மரண தண்டனை மன்னிப்பு அல்லது மேல்முறையீடு என ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டலாம் அல்லது குறைக்கப்படலாம். அப்படி செய்தால் மற்றொரு மரண தண்டனை அமலில் இருக்கும். இது குற்றவாளிக்கு சலுகை கிடைப்பதைத் தடுத்து, அவர் செய்த ஒவ்வொரு உயிரிழப்புக்கும் உரிய தண்டனையை உறுதி செய்கிறது. எனவேதான் இரட்டை மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு!கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்குத் திட்டமா? -
கிளைமேக்ஸ் வந்தாச்சு.. தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு.. பரபரக்கும் தேர்தல் களம் -
காவல் நிலைய மரணங்களில்.. இதுபோன்று நடப்பது அரிது! நீதிபதி சொன்ன பாயிண்ட்! கடும் தண்டனை இதுக்குதான்! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சாத்தான்குளம் வழக்கு: உயர் அதிகாரிகள் சொன்னதால் அடித்தோம் என்பதை ஏற்க முடியாது.. நீதிபதி சொன்ன முக்கிய பாயிண்ட் -
இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை -
காக்கிச் சட்டை டூ எம்.எல்.ஏ..! தேர்தல் ஆணையம் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது ஏன் தெரியுமா? -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு












Click it and Unblock the Notifications