Sathankulam: அடித்து பழக அப்பா, மகன் கிடைச்சிருக்காங்க! ஜெயராஜ், பென்னிக்சை கொடூரமாக தாக்கிய போலீஸ்.. நீதிபதி
மதுரை: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ் தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளனர் என்று மதுரை மாவட்ட நீதிபதி கூறினார். ஜெயராஜ், பென்னிக்சை அடித்த போது, நாம் அடித்து பழக அப்பா, மகன் கிடைத்துள்ளதாக போலீசார் பேசியுள்ளனர் என நீதிபதி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 6 ஆண்டுகள் விசாரணைக்கு பின் இன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

கயிற்றில் கட்டி தொங்கவிட்டபடி தாக்குதல்
முன்னதாக, தீர்ப்பை வாசித்த நீதிபதி முத்துக்குமரன், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது தொடர்பான பிரேத பரிசோதனையை அறிக்கையை வாசித்தார். நீதிபதி வாசித்த அறிக்கையின் விவரம் வருமாறு:- உடல் நலக்குறைவு காரணமாக ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழக்கவில்லை.
ஆய்வாளர் ஸ்ரீதர் சொன்னதாலேயே ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் தாக்கியுள்ளனர். கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டபடி தாக்கியது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வருகிறது. டேபிளில் படுக்க வைத்தும் ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் தாக்கியுள்ளனர்.
அடித்து பழக அப்பா, மகன் கிடைத்து இருக்கிறார்கள்
ஜெயராஜ், பென்னிக்சை அடித்த போது, நாம் அடித்து பழக அப்பா, மகன் கிடைத்துள்ளதாக போலீசார் பேசியுள்ளனர். தந்தை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீதான வழக்கு பொய் வழக்கு என்பது விசாரணையில் தெரியவந்தது.
காயம் அடைந்த தந்தை, மகன் அணிந்து இருந்த ஆடைகள் வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். ரத்தக்கறை படிந்த ஆடையை உறவினர்களிடம் கொடுத்து குப்பை தொட்டியில் போட போலீசார் கூறியுள்ளனர். வழக்கில் அனைத்து தடயங்களையும் குற்றம் சாட்டப்பட்ட போலீசார் அழித்துள்ளனர்." என்று நீதிபதி கூறினார்.
கடையை திறந்து வைத்து இருந்ததாக
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில், கடையை திறந்து வைத்து இருந்ததாக போலீஸ் விசாரணைக்காக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். போலீஸ் கஸ்டடியில் தந்தை - மகன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
நாட்டை உலுக்கிய இந்த வழக்கினை சிபிஐ விசாரணை நடத்தியது. இதில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பலமுறை இவர்கள் ஜாமீன் கேட்டும், ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
குறுக்கு விசாரணையை, தொடர்ந்து கூடுதலாக 400 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என்றும் அவர்கள் அடித்தே தந்தை மகனை கொலை செய்துள்ளனர் என்றும் நீதிபதி கூறினார். பொய் வழக்கு போட்டே தந்தை மகன் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து அடித்து கொன்றிருக்கிறார்கள் என்றும் நீதிபதி கூறினார். தண்டனை விவரங்கள் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
-
ராமதாசுக்கு அதிர்ச்சி! பாமகவின் மாம்பழம் சின்னம் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. அன்புமணி குஷி! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?













Click it and Unblock the Notifications