மதுரை மண்ணின் விஞ்ஞானி செல்லூர் ராஜுவுக்கு வெற்றி வாய்ப்பு
மதுரை : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Recommended Video

இதில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை இதுவரை 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக.,வில் அமைச்சர் பலர் பின்னடைவையும், தோல்வியையும் சந்தித்திருந்தாலும் சிலர் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் மதுரை மேற்கில் போட்டியிட்ட செல்லூர் ராஜூ 6000 க்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இவரை எதிர்த்து இதே தொகுதியில் திமுக வேட்பாளர் சி.சின்னம்மாள் போட்டியிடுகிறார்.
வைகை நதியை ஒரு வருடத்தில் தேம்ஸ் நதியாக மாற்றிக் காட்டுவேன். ஆனால் மதுரையை சிட்னியாக மாற்ற சில ஆண்டுகள் ஆகும் என அதிரடி பேட்டி கொடுத்து அசத்தியவர் செல்லூர் ராஜு. தெர்மாகோல் அமைச்சர் என பலரும் இவரை கேலி செய்தாலும் இந்த தொகுதியில் மக்களின் ஆதரவு இவருக்கு உள்ளது என்பதையே இன்றைய தேர்தல் முடிவு நிலவரங்கள் காட்டுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் பலர், தெர்மாக்கோல் விட்டும், துணி துவைத்தும் செல்லூர் ராஜுவை விமர்சித்தனர். ஆனால் அவற்றை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனது அக்மார்க் சிரிப்புடன் தேர்தல் பணியாற்றி வந்தார் செல்லூர் ராஜு.
-
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications