தேர்தல் முடிவில் உண்மை உறங்கிவிட்டது.. பொய் ஊர்வலம் வந்துவிட்டது.. இப்படிக்கு செல்லூர் ராஜூ!
Recommended Video
மதுரை: தேர்தல் முடிவில் உண்மை உறங்கிவிட்டது. பொய் ஊர்வலம் வந்துவிட்டது என மதுரையில் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் தமிழ்நாடு அரசு நூலகத் துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு கிளை நூலகத்தை வடக்கு சட்டமன்ற உறுப்பினர், ராஜன் செல்லப்பா மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆகியோர் திறந்து வைத்தனர்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தேர்தல் முடிவில் உண்மை உறங்கிவிட்டது, பொய் ஊர்வலம் வந்துவிட்டது.
மக்கள்தான் ஏஜமானர்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக எடுத்துக் கொள்வோம். மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் ஹிந்தி திணிப்பு உள்ளதாக எழுந்த புகார் குறித்து நாங்கள் பேசுவதை விட தமிழக முதல்வர் பேசினால்தான் சரியாக இருக்கும், அவர் பார்த்து கொள்வார்.
நாடாளுமன்ற தேரதலில் தோல்விக்கு அதிமுகவே காரணம் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறி வருகிறார். யார் யாரோ கூறும் கருத்துக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அதிமுக அரசு மீது யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக மக்களுக்கு நிறைவேற்றியிருக்கிறோம்.
தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் மக்களை மோசமாக திட்டும் குணம் கொண்டவர்கள் திமுகவினர் என்று பேசினார்.