அடப்பாவமே ஜாமீன் கிடைத்தும் நிர்மலாதேவி வெளிவருவதில் சிக்கல்.. செய்வதறியாது திகைக்கும் காவல் துறை!
மதுரை: அருப்புக்கோட்டையில் பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைத்தும் அவரால் சிறையிலிருந்து வெளி வர முடியாத சூழல் நிலவுகிறது.
அருப்புக்கோட்டையில் ஒரு கலை கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் ஆசை வார்த்தை பேசி தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 17 -ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஜாமீன் கோரி மனு
இவர் சுமார் 300 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.

சிக்கல்
அதன்படி அவருக்கு நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் நாளை சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில் அவர் வெளியே வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

முன்வரவில்லை
ஒருவருக்கு ஜாமீன் கிடைத்தால் அவரது உறவினர்கள் ஜாமீன்தாரர்களாக பொறுப்பேற்று அழைத்து செல்வது வழக்கம். ஆனால் நிர்மலா தேவி விவகாரத்தில் அவ்வாறு ஜாமீன்தாரர்களாக பொறுப்பேற்று அழைத்து செல்ல யாரும் முன்வரவில்லை.

விரக்தி
இதுகுறித்து அவரது உறவினர்களிடம் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேசி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிர்மலா தேவி அவரது கணவர், மாமனார், மாமியார், அண்ணன் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் யாரும் வரவில்லை. இந்த 300-க்கும் மேற்பட்ட நாட்களில் அவரை சந்திக்க ஒருவரும் வரவில்லை என்பதால் நிர்மலா தேவியில் விரக்தியில் தற்கொலை முயற்சியில் கூட இறங்கியதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications