மனுஸ்மிருதியை பொதுமக்கள் படிச்சுட்டா இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இருக்காது: திருமாவளவன் நம்பிக்கை
மதுரை: மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு வழங்கியது ஆர்.எஸ்.எஸ் க்கு எதிரான நடவடிக்கையை தவிர, இந்து சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் சாதிய பாகுபாடுகளுக்கும் பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்து மனுஸ்மிருதி தான். மனுஸ்மிருதி இன்று புத்தகமாக மக்களிடையே அறிமுகப் படுத்துவதற்கான காரணம் மனுஸ்மிருதி அரசியல் கொள்கையாக கொண்டிருக்கின்ற ஆர்எஸ்எஸ் இயக்கம், மக்கள் இயக்கம் போல் காண்பிக்க முயற்சித்து வருகிறது.

சராசரியான இயக்கம் இல்லை..
ஆர் எஸ் எஸ் இயக்கம் பிற கட்சிகளைப் போல சராசரியான மக்கள் இயக்கம் இல்லை; ஜனநாயக இயக்கம் இல்லை; கலாச்சார இயக்கமும் இல்லை..
மதவாத அரசியலை வெறுப்பு அரசியலை, பாகுபாடு அரசியலை கொண்டு இருக்கிறது. அது ஒரு முறைக்கு இருமுறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம்.
காந்தியடிகளை கொன்ற இயக்கம், காமராஜரை கொல்ல முயன்ற இயக்கம், பாபர் மசூதியை இடித்த இயக்கம், குஜராத் படுகொலையை நடத்திய இயக்கம், தொடர்ந்து லவ் ஜிகாத் என்றும் கர்வாசி என்றும் holy Cow பசு புனிதம் என்றும் பல்வேறு பெயர்களில் முஸ்லிம் வெறுப்பையும், கிறிஸ்தவ வெறுப்பையும், இந்த மண்ணில் விதைக்கிற இயக்கம்.

ஆர்.எஸ்.எஸ். பாஜக
இந்தியர்களை இந்துக்கள் என்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றும் பிளவுபடுத்துகிற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை மேல் சாதி கீழ் சாதி என்று பிளவு படுத்தி அவர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற இயக்கம். சமூக ஒற்றுமைக்கு எதிரான இயக்கம். ஆகையால் தான் இந்த இயக்கம் தமிழ்நாட்டில் வேறு ஒரு ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பாரதிய ஜனதா கட்சி என்றாலும் அது ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிற காரணத்தினால் வெளிப்படையாக இந்த பாகுபாடுகளை வெறுப்பு அரசியலை பேசத் தயங்குகிற இயக்கம். ஆகவே பாஜக ஒரு அரசியல் இயக்கம் என்கிற பெயரில் பேரணிகளை நடத்துவதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை.. ஆர் எஸ் எஸ் அரசியல் பிரிவாக இருக்கிற பாஜக இருக்கும்போது பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர் எஸ் எஸ் சார்பாக பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

80 அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை
ஆர் எஸ் எஸ், பாஜக வேறு வேறு அல்ல. இந்திய மண்ணில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கடந்த முறை இவர்கள் பேரணி நடத்த முயற்சித்த போது 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ஆர்எஸ்எஸ் பின்வாங்கிக் கொண்டது. மனுஸ்மிருதி முலம் இந்து சமூகத்தினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையாக மேற்கொண்டு இருக்கிறோம். இது ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான நடவடிக்கையே தவிர இந்து சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கை அல்ல. இந்துக்களின் நலன்களை பாதுகாப்பதற்காகத்தான் இந்துக்களின் பாதுகாப்பை முன்னுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு வெகுமக்கள் மத்தியில் இன்றைக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இருக்காது
மனுஸ்மிருதி படிக்கத் தொடங்கினால் விழிப்புணர்வு பெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸுக்கு இடம் இருக்காது. காவல்துறை தான் திருநெல்வேலியில் அனுமதி இல்லை; இதை வழங்கக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள். வேறு யாரும் தடுக்கவில்லை. அதை மீறி தோழர்கள் ஆங்காங்கே அமைதியான முறையில் வழங்குகிறோம். இது ஆர்ப்பாட்டம் இல்லை; பேரணி இல்லை; நாங்கள் துண்டறிக்கை விநியோகம் செய்வது போல இதை விநியோகம் செய்கிறோம். எங்களை நீங்கள் தடுக்க கூடாது என்று சொல்லி ஒரு சிலருக்கு அந்த புத்தகங்களை வழங்கி இருக்கிறார்கள். அதையும் தாண்டி காவல்துறை அவர்களை சில மணி நேரம் பிடித்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து விடுவித்து இருக்கிறார்கள். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
-
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே











Click it and Unblock the Notifications