Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கூறினார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் என்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

thiruparankundram-case-government-blessed-with-order-to-light-the-lamp-justice-gr-swaminathan

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்​க​மாக உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் முன்பாகவே தீபம் ஏற்​றப்​படும். ஆனால் நடப்பு ஆண்டில் மலை உச்சி​யில் உள்ள தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்​தர​விட்​டார்.

ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உச்சிப் பிள்​ளை​யார் கோயில் முன்​புள்ள தீபத்​தூணில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. மலை உச்சி தீபத்​தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில் அதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் தான், இரண்டாவது வழக்காக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடுகள் செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடிய வழக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தலைமையில் நடந்து வருகிறது.

இதில் தற்போது அரசு தரப்பு வாதம் வைத்து வருகிறது. 'விளக்கம் கேட்டு அரசு அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். 4 வாரங்கள் கால அவகாசம் வழஙக் வேண்டும்' என அரசு தரப்பினர் நீதிபதியிடம் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் கோவில் தரப்பு அரசு வழக்கறிஞர்கள் கூட சற்று கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்திருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தார். தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் ஜோதி என்பவர் ஆஜராகி, டெல்டா பகுதிகளில் அதி கனமழை.. நானும் பக்தி மான் தான். தயவு செய்து இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும். உணர்வுப்பூர்மான விஷயம் என்பதால் இதனை கருத்தில் கொண்டு நீதிபதி வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று தங்களது கருத்தை தெரிவித்தனர்.

தொடர்ந்து அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் விவகாரம் மாநிலம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதான வழக்கு குறித்து மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அந்த விசாரணைக்கு பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+