தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
சென்னை: தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் என்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பாகவே தீபம் ஏற்றப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன்புள்ள தீபத்தூணில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில் அதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் தான், இரண்டாவது வழக்காக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடுகள் செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடிய வழக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தலைமையில் நடந்து வருகிறது.
இதில் தற்போது அரசு தரப்பு வாதம் வைத்து வருகிறது. 'விளக்கம் கேட்டு அரசு அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். 4 வாரங்கள் கால அவகாசம் வழஙக் வேண்டும்' என அரசு தரப்பினர் நீதிபதியிடம் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் கோவில் தரப்பு அரசு வழக்கறிஞர்கள் கூட சற்று கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்திருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தார். தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில் ஜோதி என்பவர் ஆஜராகி, டெல்டா பகுதிகளில் அதி கனமழை.. நானும் பக்தி மான் தான். தயவு செய்து இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும். உணர்வுப்பூர்மான விஷயம் என்பதால் இதனை கருத்தில் கொண்டு நீதிபதி வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று தங்களது கருத்தை தெரிவித்தனர்.
தொடர்ந்து அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் விவகாரம் மாநிலம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதான வழக்கு குறித்து மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அந்த விசாரணைக்கு பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications