Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் வழக்கு.. மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல.. தமிழக அரசு வைத்த முக்கிய வாதம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று தமிழக அரசு முக்கிய வாதத்தை முன் வைத்துள்ளது. மலை உச்சியில் தீபத் தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தமிழக அரசு வாதிட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு கோயில் நிர்வாகம்தான் அனுமதி அள்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவகர் சார்பாகவும், மாவட்ட ஆட்சியர் சார்பாகவும் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Thiruparankundram Case

அப்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து அரசு தரப்பில் வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும்.

தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்திற்கு அருகில் தர்கா இருக்கிறது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. அதேபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கடந்த 73 ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. 1994ல் இருந்தே பிரச்சனை ஏற்பட்டது. தீபம் ஏற்றுவது தொடர்பாக பொதுநல வழக்கு தால்க்க்கல் செய்யப்பட்டு, 2014ல் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன. அதேபோல் மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் தான். மலையில் நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானது. மற்றவை கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது.

மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரும் மனுவில் உள்நோக்கம் உள்ளது. பிரச்சனை பெரிதாகி இருப்பதால், மக்களின் நலன் கருதி அரசு சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நிலைமையை சீர்படுத்தவே 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். மதநல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை மனதில் வைக்க வேண்டும் என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+