திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றலாம்! தமிழக அரசின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனிநீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் என்று இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை எழுமலையைச் சோ்ந்த இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் காா்த்திகை திருவிழாவன்று தீபம் ஏற்ற கடந்த மாதம் 1 ஆம் தேதி உத்தரவிட்டாா். ஆனால், சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று கருதி அன்றைய தினம் தீபம் ஏற்றப்படவில்லை.

இதைதொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ராம ரவிக்குமாா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் மீண்டும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உத்தரவிட்டார். ஆனால், அப்போதும் மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தமிழக அரசின் தலைமைச் செயலா், ஏடிஜிபி ஆகியோரை காணொலி வாயிலாகவும், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா் ஆகியோா் நேரிலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே, அரசுத் தரப்பில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஒருவாரம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அரசுத் தரப்பு, கோயில் செயலா் அலுவலா், சிக்கந்தா் தா்கா, வக்ஃப் வாரியம், ஜமாத், மனுதாரா் ராம ரவிக்குமாா், இடையீட்டு மனுதாரா்கள் என பலர் ஆஜராகி உயர்நீதிமன்றத்தில் தங்களுடைய தரப்பு கருத்துகளை கூறினர். இதையடுத்து, வழக்கு தீா்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி விழா தொடங்கியது. இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த மாணிக்கம் மூர்த்தி என்பவர் கந்தூரி விழாவையொட்டி மலை உச்சியில் ஆடு, மாடுகள் பலியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார். அப்போது, மலை உச்சியில் விலங்குகளை பலியிடக் கூடாது, அசைவ உணவுகள் பரிமாறக் கூடாது, இறைச்சிகளை எடுத்து செல்லக் கூடாது என கடந்த 2 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தரப்பு வழக்கறிஞர்கள் கந்தூரி விழா தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேம்டும் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமையான இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளால், இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்ததிகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனிநீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் என்று இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளின் முக்கிய உத்தரவுகள்
- திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தீபமேற்றுவது பொது அமைதியை சீர்குலைக்கும் என்பது மிகவும் அபத்தமானதாகும்.
- அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டுள்ளது. இந்த அளவுக்கு எந்த மாநிலமும் தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது அதிகாரிகள் தங்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனை காரணம்.
- தீபத் தூண் தர்காவுக்கு சொந்தமானது என்ற வாதம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூண் கோயில் நிர்வாகத்துக்கே சொந்தமானது.
- கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் இருக்கும் தீபத் தூணில் கோயில் நிர்வாகத்தினர் ஏற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.
- மலை உச்சியில் தீபமேற்றும் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்துடன் செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை.
- நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஹிந்து மற்றும் முஸ்லிம் பண்டிகைகளின்போது இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தொந்தரவு செய்யாமல் அவரவர் பண்டிகையை கொண்டாடிக் கொள்ளலாம்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications