திருப்பரங்குன்றத்தில் அரோகராவுக்கு பதில்.. பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்ட இந்துத்துவா அமைப்பினர்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் இந்துத்தவா அமைப்பினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை பகுதியில் கலவரம் வெடித்தது. இதில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவர்கள் அரோகரா என்பதற்கு பதில், பாரத் மாதா கி ஜெய் என கோஷம் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதும் தீபம் ஏற்றப்பட்டு இருக்கிறது. வழக்கமாக மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டும் இதேபோல தீபம் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினர்.
வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வந்தது. வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், காலங்காலமாக உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டும் அங்கு தீபம் ஏற்றப்படும். ராம ரவிக்குமாரின் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனயைடுத்து நீதிபதி திருப்பரங்குன்றம் மலையில் ஏறி ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து டிச.1ம் தேதி, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில், கார்த்திகை தீபம் நாளில்(டிச.3) தர்காவுக்கு அருகில் உள்ள தீப தூணிலும் ஏற்றலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி, ராம ரவிக்குமார் சார்பில், நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபம் ஏற்ற ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
மறுபுறம் கோயிலுக்கு வெளியில் கூடியிருந்த இந்துத்துவா அமைப்பினர், தடுப்புகளை உடைத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைய முயன்றனர். இதில், 2 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த இந்துத்துவா அமைப்பினர், வழக்கமாக பக்தர்கள் முழங்கும் அரோகரா முழக்கத்திற்கு பதில் பாரத் மாதா கி ஜெய் என்று முழங்கினர். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி!












Click it and Unblock the Notifications