திருப்பரங்குன்றத்தில் வெடித்த கலவரம்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த உத்தரவு என்ன? விவரம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி பிள்ளை கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணிலும், கார்த்தி தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த உத்தரவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், "மதுரை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், இந்த ஆண்டு முதல் கோயில் உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அது செயல்படுத்தாமல் வந்ததால் நீதிமன்றத்தில் நாங்கள் இன்று மதியம் முறையிட்டிருந்தோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்காக நீதிபதி தாக்கல் செய்ய சொல்லி இருந்தார்.

வழக்கை தாக்கல் செய்த பின்னர், வழக்கு விசாரணை மதியம் 3 மணிக்கு வந்தது. விசாரணைக்காக கோயிலின் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலரையும், மதுரை மாநகராட்சி ஆணையரையும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக சொல்லியிருந்தார் நீதிபதி. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. அதேபோல இந்த வழக்கு விசாரணையை மாலை 6.05 மணிக்கு எடுத்துக் கொள்வதாகவும், அதுவரை தீபம் ஏற்றப்படுகிறதா என்பதற்கு நேரம் வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால், மாலை 6.05 மணிக்கு பின்னரும் தீபம் ஏற்றப்படவில்லை. எனவே மத்திய தொழில் பாதுகாப்பு படை உடன் மனுதாரர்கள் ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்றலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த வழக்கு மீண்டும் நாளை மதியம் விசாரணைக்கு வருகிறது" என்று கூறியிருக்கிறார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications