ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!
மதுரை: விதிகளை மீறும் கல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் பல குவாரிகள் மூடப்பட்ட நிலையில், மதுரையில் இன்று 11 குவாரிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த இரண்டு கல்குவாரிகளை தற்காலிகமாக மூடும்படி தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். பொதுமக்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 15 கல்குவாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ட்ரோன் உதவியுடன் ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, மே 25 அன்று அமைச்சர் டி.கே.பிரபு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் அளித்த அறிவுறுத்தலின்படியும், ட்ரோன் ஆய்வறிக்கையின் அடிப்படையிலும், ஆய்வு செய்யப்பட்ட 15 குவாரிகளில் விதிகளை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகள் உடனடியாக மூடப்பட்டன. இந்த விதிமீறல்களின் தீவிரம் குறித்த விரிவான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சமர்ப்பிக்கும் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மதுரையிலும் 11 குவாரிகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. மூடப்பட்ட குவாரிகள் அனைத்தும் விதிமீறல் குற்றச்சாட்டில் சிக்கியவை. எனவே இந்த குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது, விதி மீறலில் ஈடுபட்டதற்காக கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
கொடுமை! குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு.. புகார் அளித்த வழக்கறிஞர் மீது தவெகவினர் தாக்குதல்












Click it and Unblock the Notifications