வேரோடு சாய்ந்த மரம்.. மரத்தடியில் படித்து கொண்டிருந்த 17 மாணவர்கள் காயம்.. மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை அருகே மேலூரில் உள்ள அரசு பள்ளியில் மரத்தடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், மாணவ - மாணவிகள் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. காலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசுப் பள்ளியிலும் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதில் இன்று காலை 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர்.

9-ம் மாணவர்களுக்கு மதியம் தான் தேர்வு என்பதால், மரத்தடியில் அமர்ந்து தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில், மாணவ - மாணவிகள் பலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மரத்திற்குள் சிக்கிய மாணவ மாணவிகளை உடனடியாக மீட்கப்பட்டனர். இதில் மாணவிகள் 12 பேர், மாணவர்கள் 5 பேர் என மொத்தம் 17 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த 17 பேரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மரத்தின் வேரானது உறுதித்தன்மையை இழந்ததால் சாய்ந்து விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் 17 பேர் காயமடைந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications