போன் பேசி யாரையாவது கொன்னேனா? எகிறிய டிடிஎப் வாசன்.. வா போகலாம்னு பிடித்து ஜீப்பில் ஏற்றிய போலீஸ்
மதுரை: என்ன பார்த்து எல்லோரும் கெட்டு போறாங்களா, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை இருக்கே அதை பார்த்து யாரும் கெட்டு போக மாட்டாங்களா என மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த போது டிடிஎப் வாசன் கூச்சலிட்டவாறே வந்தார். அவரை ஜீப்பில் உள்ளே தள்ளி போலீஸார் அமர வைத்தனர்.
செல்போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய விவகாரத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று மதுரை திருமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், காரை அஜாக்கிரதையாகவும் கவனக் குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்விதமாக செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டியதை கேமராவில் பதிவு செய்து அவருடைய யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார்.
இதற்காக அவர் ஜாமீனில் வெளியே வர முடியாதபடியான ஒரு வழக்கு உள்பட 8 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டிய போது வாசன் கத்திக் கொண்டே வந்தார்.
அவர் கூறுகையில், எனக்கு ஒரே ஒரு கேள்வி , சட்டம் என்பது எல்லா மக்களுக்கும் பொதுவானதுதானே. வாங்க இந்த ரோட்டிலேயே நான் நிற்கிறேன், எத்தனை பேர் ஹெல்மெட் போடாமல் வருகிறார்கள் பாருங்கள், எத்தனை பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் பாருங்கள்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் drunk and drive case தான் போடுகிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் இத்தனை பிரிவுகளின் கீழ் வழக்கா, என்னை பார்த்துதான் எல்லாரும் கெட்டு போறாங்களா, வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கே, அதை பார்த்து யாரும் கெட்டு போகமாட்டாங்களா, நான் போனை காதில் வைத்தா பேசினேன், ஸ்பீக்கரில் போட்டுத்தானே பேசினேன். யாருடைய உயிருக்கு நான் பங்கம் விளைவிச்சேன், போர்ஷே காரை எடுத்துக் கொண்டு குடித்துவிட்டு இருவரை கொன்றவங்களுக்கு ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள்.
நான் நீதித் துறையை நம்பியிருக்கேன். எனக்காக நீதி கிடைக்கும். 23 வயது சின்ன பையன் எந்த ஒரு பேக்கிரவுண்ட்டும் இல்லாமல் வளர்ந்தால் இப்படித்தான் செய்வீங்களா? என் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள். இவ்வாறு டிடிஎப் வாசன் கொந்தளித்தார்.
இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனக்கு வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் படப்பிடிப்பு இருப்பதால் ஜாமீன் அளிக்குமாறு கோரியிருந்தார். மேலும் தான் காரை இயக்கியதால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தனது வாதத்தில் கூறியிருந்தார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு பைக் ஓட்ட கூடாது என எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காரை இயக்கியுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார் என அரசு தரப்பு வாதம் செய்துள்ளது. இதையடுத்து ஜாமீன் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறும் அதன் மீது மதியம் 2.40 மணிக்கு விசாரிப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications