குளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி!
Recommended Video
மதுரை: குளிக்க போன திவ்யாவை.. கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்களால் உசிலம்பட்டி நடுங்கி கிடக்கிறது.
மதுரை உசிலம்பட்டி உள்ள ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறாள் திவ்யா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 16 வயது சிறுமி.. சேடப்பட்டியில் பாட்டி வீடு உள்ளது.
அந்த ஊரில் திருவிழா என்பதால், திவ்யா குடும்பத்துடன் சென்றிருக்கிறார். திருவிழா முடிந்ததும், குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பிவிட திவ்யா மட்டும் அங்கேயே பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று காலை அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற திவ்யாவை காணவில்லை. நீண்டநேரமாக திரும்பாததால், அவரை தேடி உறவினர்கள் சென்றனர். பல இடங்களில் தேடினர். அப்போதுதான், மலைப்பகுதியில் கல்லால் தலை நசுக்கப்பட்டு மாணவி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.
இதை கண்டு அலறிய குடும்பத்தினர், உடனடியாக சேடப்பட்டி போலீசாருக்கு தகவல் சொல்லவும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் இந்த மிக மிக பயங்கரமாக நடந்துள்ளதை கண்டு அதிர்ந்தனர். சராசரி மனிதன் செய்திருக்கக்கூடிய கொலை இல்லை அது.. கொடூர மனம் படைத்தவர்கள் யார்என்பதை கண்டறிந்து அதன்படியே அவர்களை பிடித்தும் விட்டனர் போலீசார்.
அந்த கிராமத்தை சேர்ந்த மது, மாதவன் ஆகிய 2 பேர்தான் அந்த கொலையாளிகள் என்பதை உறுதியானது. இரண்டு பேருமே இரட்டையர்கள். இவர்களுக்கு ஒரு வினோத பழக்கம் உள்ளது. சண்டை ஆனாலும் சரி, சந்தோஷம் ஆனாலும் சரி, எதை செய்தாலும் ஒன்றாகத்தான் செய்வார்களாம். அப்படி செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்குமாம்.. அதிலும் பெரும்பாலும் குரூரதன்மையாகவே இருந்திருக்கிறது. அப்படித்தான் திவ்யாவின் சம்பவமும் நடந்துள்ளது.
மாதவனின் வீட்டுக்கு திவ்யா தண்ணீர் பிடிக்க அடிக்கடி போவாராம். அப்போதுதான் மாதவன் திவ்யாவை பார்த்துள்ளான். ஒருதலைக்காதல் வந்துள்ளது.. இதற்கு திவ்யா மறுத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த சமயத்தில்தான் குளிப்பதற்காக திவ்யா சென்று கொண்டிருந்தபோது, அந்த ரோட்டில் யாருமே இல்லை. இதைதான் மாதவன் கவனித்துள்ளார்.
திவ்யா பின்னாடியே அவர் முதலில் போக, பின்னாடியே மதுவும் சென்றுள்ளான். இறுதியில் இருவருமாக சேர்ந்து திவ்யாவை மாறி மாறி நாசம் செய்துள்ளனர். இதில் திவ்யா மூச்சடைத்து இறந்தேவிட்டார். உயிர் பிரிந்துவிட்டது என்று தெரிந்தும், இருவரும் சேர்ந்து திவ்யாவின் கழுத்தை நெரித்துள்ளனர். பிறகு ஒரு பெரிய கல்லை தூக்கி கொண்டு வந்து திவ்யா முகத்தில் போட்டு, முகத்தை சிதைத்துள்ளனர். அதன்பிறகு, திவ்யாவை இழுத்துகொண்டு போய் புதர் நிறைந்த ஒரு பாறையின் இடுக்கில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த கொடூர இரட்டையர்களின் செயல்கள், நடவடிக்கைகளை, குணாதிசயங்களை கண்டால், இவர்களுக்கு மேலும் பல குற்ற செயல்களில் தொடர்பு கண்டிப்பாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications