Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Psycho twins who hunted horribly in Usilampatti

    மதுரை: குளிக்க போன திவ்யாவை.. கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்களால் உசிலம்பட்டி நடுங்கி கிடக்கிறது.
    மதுரை உசிலம்பட்டி உள்ள ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறாள் திவ்யா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 16 வயது சிறுமி.. சேடப்பட்டியில் பாட்டி வீடு உள்ளது.

    அந்த ஊரில் திருவிழா என்பதால், திவ்யா குடும்பத்துடன் சென்றிருக்கிறார். திருவிழா முடிந்ததும், குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பிவிட திவ்யா மட்டும் அங்கேயே பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.

    twins harassment and murdered 16 year old girl near madurai

    சம்பவத்தன்று காலை அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற திவ்யாவை காணவில்லை. நீண்டநேரமாக திரும்பாததால், அவரை தேடி உறவினர்கள் சென்றனர். பல இடங்களில் தேடினர். அப்போதுதான், மலைப்பகுதியில் கல்லால் தலை நசுக்கப்பட்டு மாணவி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

    இதை கண்டு அலறிய குடும்பத்தினர், உடனடியாக சேடப்பட்டி போலீசாருக்கு தகவல் சொல்லவும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் இந்த மிக மிக பயங்கரமாக நடந்துள்ளதை கண்டு அதிர்ந்தனர். சராசரி மனிதன் செய்திருக்கக்கூடிய கொலை இல்லை அது.. கொடூர மனம் படைத்தவர்கள் யார்என்பதை கண்டறிந்து அதன்படியே அவர்களை பிடித்தும் விட்டனர் போலீசார்.

    அந்த கிராமத்தை சேர்ந்த மது, மாதவன் ஆகிய 2 பேர்தான் அந்த கொலையாளிகள் என்பதை உறுதியானது. இரண்டு பேருமே இரட்டையர்கள். இவர்களுக்கு ஒரு வினோத பழக்கம் உள்ளது. சண்டை ஆனாலும் சரி, சந்தோஷம் ஆனாலும் சரி, எதை செய்தாலும் ஒன்றாகத்தான் செய்வார்களாம். அப்படி செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்குமாம்.. அதிலும் பெரும்பாலும் குரூரதன்மையாகவே இருந்திருக்கிறது. அப்படித்தான் திவ்யாவின் சம்பவமும் நடந்துள்ளது.

    மாதவனின் வீட்டுக்கு திவ்யா தண்ணீர் பிடிக்க அடிக்கடி போவாராம். அப்போதுதான் மாதவன் திவ்யாவை பார்த்துள்ளான். ஒருதலைக்காதல் வந்துள்ளது.. இதற்கு திவ்யா மறுத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த சமயத்தில்தான் குளிப்பதற்காக திவ்யா சென்று கொண்டிருந்தபோது, அந்த ரோட்டில் யாருமே இல்லை. இதைதான் மாதவன் கவனித்துள்ளார்.

    திவ்யா பின்னாடியே அவர் முதலில் போக, பின்னாடியே மதுவும் சென்றுள்ளான். இறுதியில் இருவருமாக சேர்ந்து திவ்யாவை மாறி மாறி நாசம் செய்துள்ளனர். இதில் திவ்யா மூச்சடைத்து இறந்தேவிட்டார். உயிர் பிரிந்துவிட்டது என்று தெரிந்தும், இருவரும் சேர்ந்து திவ்யாவின் கழுத்தை நெரித்துள்ளனர். பிறகு ஒரு பெரிய கல்லை தூக்கி கொண்டு வந்து திவ்யா முகத்தில் போட்டு, முகத்தை சிதைத்துள்ளனர். அதன்பிறகு, திவ்யாவை இழுத்துகொண்டு போய் புதர் நிறைந்த ஒரு பாறையின் இடுக்கில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

    இந்த கொடூர இரட்டையர்களின் செயல்கள், நடவடிக்கைகளை, குணாதிசயங்களை கண்டால், இவர்களுக்கு மேலும் பல குற்ற செயல்களில் தொடர்பு கண்டிப்பாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+