அடுத்தடுத்து கொலையாகும் மூதாட்டிகள்.. பதட்டத்தில் மதுரை.. திணறும் போலீஸ்
மதுரை: மதுரையில் அடுத்தடுத்து மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டுள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் போலீஸார் திணறி வருகின்றனர்.
கலை, கலாச்சார நகரமாக அறியப்படும் மதுரையில் அடுத்தடுத்து மூதாட்டிகள் கொல்லப்பட்டிருப்பது மக்களை அதிர வைத்துள்ளது. அதுவும் அமைச்சர் செல்லூர் ராஜுவின் தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் இந்தக் கொலைகள் நடந்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 31ஆம் தேதி செல்வது பகுதியை சேர்ந்த 81 வயது நிரம்பிய ஆண்டாள் என்ற மூதாட்டி தன் வீட்டில் ஒரு லட்ச ரூபாய் வீட்டில் வைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் ஒரு லட்ச ரூபாய் இருந்ததை அறிந்த மர்மநபர்கள் யாரோ ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு ஒரு லட்ச ரூபாயை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வு நடந்து ஒரு வாரம் முடிவுக்குள் இரண்டாவதாக இன்று காலை அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி மம்மது பீவி என்பவர் தனியாக வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தோட்டினை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செல்லூர் காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து உடலில் ரத்தக்காயம் ஏதும் இல்லாமல் கொலை செய்யப்பட்ட மம்மது பீவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் மதுரை மாநகர் செல்லூர் பகுத்து துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டிருப்பது நகைகள் அல்லது முன்பகையா என்று கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்












Click it and Unblock the Notifications