வைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஈழத் தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார்? உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. வைகோ காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன், வைகோ நாடாளுமன்றத்தில் முதலில் பேசும் போது ஈழத் தமிழர் துரோகிகள் குறித்து பேச வேண்டும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது: பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. உறுப்பினர்கள் சேர்க்கை விரைவாக நடைபெறுகிறது. விண்வெளி ஆராய்ச்சி துறையின் வெற்றியாக சந்திராயன் 2 செயற்கோள் வெற்றிகரமாக அனுப்பட உள்ளது.

நாடு முழுதும் நதிநீர் பிரச்னைகள் உள்ளது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கை

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் ஒரு மாணவர் கூட சேராமல் மூடப்படும் நிலைக்கு உள்ளன. 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி சென்று உள்ளனர். தமிழக அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிடும் பொழுது பல பேரின் தோல் உரிக்கப்படும் என்றும் கூறினார்.

 இரட்டை வேடம்

இரட்டை வேடம்

தமிழகத்தில் மொழி கொள்கை என்பது ஒன்றும் இல்லை. வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பிற மொழிகள் கற்று கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு முதல் இந்தி சொல்லி கொடுக்கும் பள்ளிகளை மூட முடியுமா? என்று கேள்வி எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன், மும்மொழி கொள்கையில் இரட்டை வேடம் போடப்படுகிறது என்றார்.

துரோகிகள் குறித்து பேச வேண்டும்

துரோகிகள் குறித்து பேச வேண்டும்

இலங்கை தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார்? உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. வைகோ காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன், வைகோ நாடாளுமன்றத்தில் முதலில் பேசும் போது இலங்கை தமிழர் துரோகிகள் குறித்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆங்கிலத்தில் தேர்வு

ஆங்கிலத்தில் தேர்வு

தபால்த் துறையில் கடந்த முறை நடத்திய தேர்வில் தமிழில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்து உள்ளன. கடிதம் போக்குவரத்துக்கு ஏதுவாகவே ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறுகிறது. தபால்த் துறை தமிழில் தேர்வு எழுதலாம் என பாஜக தான் கொண்டு வந்தது என்றும் பேசினார்.

இந்தி மயம்

இந்தி மயம்

இந்தியா முழுதும் இந்தி மயமானலும் தமிழகத்தில் தமிழ் மட்டுமே என இருக்கிறது. பிழைப்புக்காக, அரசியல் லாபத்திற்க்காக தமிழை முன் நிறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல வர இருக்கிறது, இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+