Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோஷம் .. பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். இன்று அதிகாலை 5.51 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான இந்த நிகழ்வை காண பல லட்சம் பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுவார். இதுதான் மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கியமான நாளாகும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் திருவிழாவைக் காண குவிவார்கள். கொரோனா காலத்திற்கு பின், இந்த ஆண்டு தான் மிக மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Vararu Vararu Alagar Vararu - Chithirai Thiruvizha 2023 : Kallazhagar dressed in green clothes and descended into the Vaigai river

எங்கும் அன்னதானங்கள் வழங்கப்படுகிறது. மொத்த மதுரையும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. எங்கு கண்டாலும் தண்ணீர் பந்தலும், நீர் மோர் பந்தலும், அன்னதானக்கூடங்களும் நிரம்பி காணப்படுகின்றன. மக்கள் புத்தாடை உடுத்தி, விண்ணை பிளக்க கோவிந்தா கோஷம் எழுப்பி கள்ளழகரை வரவேற்று வருகிறார்கள்.

Vararu Vararu Alagar Vararu - Chithirai Thiruvizha 2023 : Kallazhagar dressed in green clothes and descended into the Vaigai river

வைகை ஆற்றங்கரை ஓரத்திலேயே குதிரை வாகனத்தில் வண்டியூருக்கு கள்ளழகர் செல்கிறார். மே 6ஆம் தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். மே 6ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் மதுரைக்கு வந்த நோக்கம் நிறைவேறியதும் அன்றைய தினம் நள்ளிரவு இராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மே 7ஆம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அழகர். அன்று பிற்பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லாக்கில் புறப்படுவார். இராமநாதபுரம் மன்னர் சேதபதி மண்டபத்தில் தங்கும் கள்ளழகர் மே 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை நேரத்திலும் வந்து வழியனுப்பி வைப்பார்கள். மே 9ம் தேதி காலையில் கள்ளழகர் அழகர் கோயிலுக்கு வந்தடைகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+