திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கு எப்போது இடைத் தேர்தல்.. ஹைகோர்ட் அதிரடி கேள்வி
2 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தலை நடத்துவீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திமுகவின் கருணாநிதி மற்றும் அதிமுகவின் போஸ் இருவரும் இறந்துவிட்டதால், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் உடனடியாக நடத்தப்படவில்லை.

எனவே கே.கே. ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றினை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அதில், "பருவமழையால், தற்போது தேர்தல் நடத்த வேண்டாம் என தலைமைத் தேர்தல் தேர்தல் கமிஷனுக்கு, தமிழக அரசு பரிந்துரைத்தது. இது ஏற்புடையதல்ல.
தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
[நல்ல வேகம்.. பெரிய வெளிச்சம்.. 2 பறக்கும் தட்டுகளை பார்த்தோம்.. விமானிகள் பரபர வாக்குமூலம்!]
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இது சம்பந்தமாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் சரமாரியான கேள்வி எழுப்பினார்கள். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன?
எப்போது இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படும்? மேலும் அந்த 2 தொகுதிக்கான தேர்தல் கால அட்டவணை ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால் அதனை நவம்பர் 26-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அட்டவணை தாக்கல் செய்யப்படும் அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications